(Reading time: 20 - 39 minutes)
Oru veedu iru vaasal
Oru veedu iru vaasal

   

”சரி வராதீங்க நான் கான்டீன் போறேன்“

   

”நான் இங்க பேசிக்கிட்டு இருக்கேன் நீ பாட்டுக்கு போறேன்னு சொன்னா என்ன அர்த்தம் உன் முதலாளியை மதிக்க மாட்டியா“

   

”மதிக்கற மாதிரி நீங்க இருந்தா நிச்சயம் நான் மதிச்சிருப்பேன் சார்”

   

”வேணாம் என் கோபத்துக்கு ஆளாகாத”

   

”ஓ நீங்க கோபமா இருக்கீங்களா சாரி சாரி தெரியாம பேசிட்டேன், இப்ப நான் என்ன செய்யனும் சார்“

   

”ம் அப்படியே நில்லு நான் சொல்றவரைக்கும்”

   

”ஓகே சார்” என சொன்னவள் நிற்கலானாள்.

   

அவனும் அவளையே பார்த்தபடி இருந்தான்.

   

நேரம் ஓடிக் கொண்டு இருந்தது கால் வலி எடுத்து அவளாக தன்னிடம் கெஞ்ச வேண்டும் என ஆசைக்கொண்டான் ஆனால் அவளோ வலி எடுத்தும் அதை தன் புன்னகையில் மறைத்தபடி மரம் போல நின்றுக் கொண்டிருந்தாள், ஆபீஸ் நேரமே முடிந்துவிட்டது, அப்போதும் அவள் அப்படியே நின்றாள். அவனுக்கே அவளை அவ்வளவு நேரம் பார்த்து பார்த்து ஒருவிதமான இரக்கம் வந்தது

   

”சரி சரி போதும் ரிலாக்ஸ்” என்றான் அவ்வளவுதான் ரோஜா நின்ற இடத்திலேயே சட்டென அமர்ந்துக் கொண்டாள், அவளின் கண்கள் கலங்கிவிட்டது கண்ணீர் அவளின் கன்னத்தை வருட அவளோ தனது பாதத்தை மெதுவாக தடவிக் கொடுக்கலானாள். அவளின் இந்த பரிதாபமான நிலையைக் கண்டு சட்டென அவளிடம் வந்து அமர்ந்து அவளின் கண்ணீரைக் கண்டு மனம் உடைந்தவன் அவளது பாதத்தை வருட அவளோ அவனது கையை 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.