“நாங்க எல்லாரும் ரிஷிக்காகதான் வந்தோம்னு இங்க ஒரு போட்டி நடக்குதுன்னு சொல்லிடலாமே”
என்றாள் சோனா
”இப்ப இதப்பத்தி சொல்றதால எதுவும் நடக்காது சரியா அதோட போட்டி முடியறவரைக்கும் நீங்க போட்டியாளர்கள்தான் இந்த வீட்ல விருந்தாளியாதான் வந்திருக்கீங்க சரியா எனக்கு ஒண்ணும் பிரச்சனையில்லை நான் உண்மையை சொல்லிடுவேன் ஆனா என்னோட சொந்தக்காரங்களுக்கு ரிஷின்னா ரொம்ப பிடிக்கும் அப்புறம் அவங்களும் பொண்ணுங்களை தேர்ந்தெடுக்கறோம் பரிட்சை வைக்கிறோம்னு சொல்லி உங்களுக்கு நிறைய போட்டிகள் வைச்சிட்டா என்ன செய்வீங்க.
எனக்கு உங்களை பத்தி தெரியும் அதனால நான் சிம்பிளா வைக்கிறேன் ஆனா அவங்க கிராமத்துக்காரங்க காலையில 4 மணிக்கு எழ சொல்வாங்க, வீடு பெருக்கி, கழுவி, மெழுக சொல்வாங்க, கோலம் போட சொல்வாங்க, மாட்டுத் தொழுவத்தை பார்த்துக்க சொல்வாங்க, கதிர் அறுக்க சொல்வாங்க, விதை விதைக்க சொல்வாங்க, கிராமத்து சமையல் செய்ய சொல்வாங்க, இது மாதிரி இன்னும் நிறைய இருக்கு.
சோனாவால இதையெல்லாம் செய்ய முடியாது வந்தனா பாட்டி தாத்தாவோட வளர்ந்த வளர்ப்புன்னாலும் விவசாயம் செய்ய தெரியாது மிருதுளாவுக்கு அசைவம் இல்லைன்னா உணவே இறங்காது ஆனா அங்க அசைவம் சாப்பிடறதுக்கு கூட காலம் நேரம் பார்ப்பாங்க நந்தினி கிராமத்து பொண்ணாவே இருந்தாலும் அவளுக்கும் இது கஷ்டம்தான் அந்த ஒரு காரணத்தை மனசுல வைச்சித்தான் நான் உங்களை விருந்தாளிகள்ன்னு சொல்லப்போறேன் இல்லை உண்மையை சொல்லுங்கன்னு சொன்னாலும் சொல்லிடறேன்” என சொல்ல அந்த 4 பெண்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு வேண்டாம் என தலையை ஆட்டினார்கள். அதில் சோனா தாத்தாவிடம்
”சாரி தாத்தா நான் இந்தளவுக்கு யோசிக்கலை.”
“பரவாயில்லைம்மா இந்த சமயோசித புத்திதான் உங்க 4 பேருக்கிட்டயும் இருக்கனும்னு நான்