“அதான் என்ன மீட்டிங்” என அர்ஜூன் கேட்க கருணாவும் அந்த மீட்டிங் பற்றி விளக்கமாக சொல்லி முடித்துவிட்டு
”அந்த மீட்டிங்குக்காக நான் இன்னும் எந்த பிரசன்டேஷனும் செய்யலை. இன்னிக்கு செய்யலாம்னு நினைச்சேன் ஆனா ஊருக்கு கூட்டிட்டு வந்துட்டாங்க அதனால நாளைக்கு தான் பைல் ரெடி பண்ணிடனும் அண்ணாகிட்ட சொல்லிடு” என சொல்ல
”சரி சரி நான் சொல்லிக்கறேன்” என சொல்லிவிட்டு போனை வைத்தவன் ரிஷியிடம்
”அண்ணா மீட்டிங் பத்தி அரைகுறையா சொல்றான் அவனுக்கே முழுசா தெரியலை இன்னும் பிரசன்டேஷன் கூட ரெடி பண்ணலையாம் அவன் எல்லாம் செஞ்சி முடிக்கட்டும் அப்புறமா கேட்டுக்கலாம் இப்போதைக்கு ஊருக்கு போறத பத்தி யோசிக்கலாம். 10 வருஷம் முன்னாடி அந்த கிராமத்துக்கு போனது. இப்ப எல்லாரும் மாறிட்டிருப்பாங்கள்ல”
“ஆமாம் நாமளே நிறைய மாறிட்டோம் அவங்க மாறமாட்டாங்களா”
“நம்மளை விடுண்ணா 10 வருஷம் முன்னாடியும் நமக்கு கல்யாணம் ஆகலை இப்பவும் கல்யாணம் ஆகலை ஆனா அந்த கிராமத்தில நாம சைட் அடிச்ச பொண்ணுங்க எல்லாருக்கும் கல்யாணம் ஆயிருக்குமே“
”ஆமா ஆயிருக்கும் என்ன செய்றது” என ரிஷி சோகமாக சொல்ல
”அதுக்குதான் நான் அப்பவே சொன்னேன் பேசாம 10 வருஷம் முன்னாடியே நாம கிராமத்து பொண்ணுங்க 2 பேரை ஆளுக்கு ஒண்ணு கட்டிக்கலாம்னு சொன்னேன் நீங்கதான் படிப்பு இருக்கு பாரின் போகனும்னு ஓடிட்டீங்க இல்லைன்னா” என பெருமூச்சு விட்டான் அர்ஜூன்
“இல்லைன்னா என்ன ரொம்ப பெருமூச்சு விடாதடா அன்னிக்கு கிடைக்கலைன்னா என்ன இன்னிக்கு போலாம் எந்த பொண்ணு கல்யாணம் ஆகாம இருக்கோ அதை கட்டிக்கலாம்” என ரிஷி சொல்ல அதைக்கேட்டு சோனா சிரித்தாள்.