”ஆமாம்மா நானும் உன்கிட்ட ஒரு விசயம் சொல்லனும்” என்றான் அர்ஜூன் அதைப் பார்த்து ரிஷி அவனை பார்த்து முறைக்க சோனாவிற்கு சிரிப்பே வந்தது
”சரி சொல்லுங்க என்ன விசயம்” என்றாள் நந்தினி
”நந்தினி தாத்தா இங்க கூட்டிட்டு வந்தது கூட ஒரு போட்டியாம்” என்றான் ரிஷி
”உங்களுக்கு எப்படி தெரியும்” என்றாள் சோனா
”சித்திகிட்ட சொல்லியிருக்காரு. அவங்க பேசறப்ப ஒட்டுக்கேட்டோம்” என்றான் அர்ஜூன்
”அப்ப நான் நினைச்சது சரிதான். இவ்ளோ நேரம் நாங்களும் இதப்பத்திதான் பேசிக்கிட்டு இருந்தோம் இப்ப நீங்களும் அதையே சொல்றீங்க நல்லது. அப்ப நாங்க இப்பவே எங்க திறமையை காட்டறோம்” என சொல்லிய சோனா அங்கிருந்த சொந்தக்காரர்களுடன் பழக சென்றாள். ஆனால் சோனாவிற்கு அது சற்று தடுமாற்றமாக இருந்தது. அவர்களுடன் சரியாக ஒன்றி பழக முடியவில்லை. அவள் சென்றபிறகு வந்தனாவும் மிருதுளாவும் கூட அங்கிருந்த சொந்தங்களுடன் பழக சென்றார்கள். அந்த சொந்தங்களும் நன்றாகவே அவர்களுடன் பேசி பழகினார்கள்.
நந்தினியிடம் வந்த அர்ஜூன்
”போம்மா நீயும் எல்லார்கூடவும் பழகி நல்ல பேர் எடு அப்பதான் நிறைய மார்க் கிடைக்கும் போம்மா போ” என சொல்ல அவளும் சென்றாள். அவள் ஏற்கனவே சொந்த பந்தங்களுடன் புழங்கிய காரணத்தால் இந்த புதிய மனிதர்களிடம் எளிதாக ஒட்டிக்கொண்டாள்.
அந்த 4 பெண்களிலும் நந்தினி மட்டும் இயல்பாக பேசுவதையும் பழகுவதையும் கண்ட தாத்தா அவளுக்கு அனுசரித்தலுக்காக 100 மார்க் என மனதில் குறித்துக்கொண்டார்.
அடுத்து வந்தனா அவள் மற்றவர்களுடன் பழகும் விதங்கள் முற்றிலும் நடிப்பு போலவே இருக்கவே அவர் மிருதுளாவைப் பார்த்தார். அவளோ அருந்ததியிடமே இருந்தாள் அவர் எங்கு