சென்றாலும் அங்கு சென்றாள் பாட்டி யாரிடம் பேசினாரோ அவர்களுடன் பேசினாளே தவிர முழுமையாக எல்லாருடனும் பழகவில்லை. அடுத்து சோனா அவளால் அங்கு இருந்தவர்களிடம் பழக முடியாமல் திண்டாடினாள். அதைப்பார்த்த தாத்தா அவளிடம் சென்றார்
”என்னமா ரொம்ப டென்ஷனா இருக்க போல என்னாச்சி” என கேட்க
”சாரி தாத்தா என்னால யாரு கூடவும் சரியா பேச முடியலை அவங்க பேசறது எனக்கு புரியலை என் கூட பழக அவங்களுக்கு விருப்பம் இல்லை போல” என சொல்லி வருத்தப்பட
”அப்படியெல்லாம் இல்லை உன்னோட இந்த நடை உடை பாவனையை பார்த்து மத்தவங்க உன்னை விலக்கறாங்க அவ்ளோதான்”
“ஓ அப்படின்னா நான் என்ன செய்யனும்”
“நீ அவங்களை மாதிரி மாறிடு இப்ப வா சாப்பிடலாம்” என அழைத்துக்கொண்டு அனைவரும் இருந்த இடத்திற்கு வந்தார்.
தாத்தாவின் வருகைக்காக விருந்து தடல் புடலாக செய்யப்பட்டது. காலை டிபனிலும் கூட அசைவம் சைவம் என சமையலில் கலக்கியிருந்தார்கள். அனைவரும் விரும்பி சாப்பிட்டனர். வந்தனா அந்த உணவுகளின் ருசியை ரசித்து சாப்பிட்டவள் அந்த உணவு செய்முறையை பற்றி அந்த வீட்டில் இருந்த பெண் ஒருவரிடம் விசாரித்து தெரிந்துக்கொண்டாள்.
அதே போல மதியம் சமைக்க சென்ற பெண்களுக்கு உதவி செய்வதாக இந்த 4 பெண்களும் சென்றனர் அதில் வந்தனா அவர்கள் சமைக்கும் முறையை பார்த்துக்கொண்டாள். நந்தினியும் சோனாவும் சமைக்க தேவையான காய்கறிகள் வெட்டித்தரும் வேலையை செய்தார்கள். மிருதுளா ஒரு ஓரமாக நின்றுகொண்டு வேடிக்கை பார்த்தாள். ஒரு வழியாக மதிய சமையலும் முடிந்த நிலையில் மீண்டும் பந்தி போடப்பட்டு அனைவரும் சாப்பிட்டு முடித்து எழுந்தார்கள்.
சாப்பிட்டு முடித்த கையோடு தாத்தா குலதெய்வக்கோயிலில் பொங்கல் வைக்க ஒரு நாள்