(Reading time: 17 - 33 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

பார்த்து குறித்துக்கொண்டார். மாலை விளக்கு வைக்கும் நேரத்திற்கு முன்பாகவே தாத்தா தன் சொந்தங்களிடம் சொல்லிவிட்டு அவர்களையும் ஒரு நாள் வந்து தன் வீட்டில் தங்கும் படி சொல்லிவிட்டு தன் குடும்பத்தை அழைத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தார்.

   

வீட்டிற்குள் நுழைந்ததும் தாத்தா அந்த 4 பெண்களிடம் டின்னர் செய்ய சொல்ல அவர்களும் சென்று டின்னர் வேலைகளை முடித்தனர். 

   

சாப்பிட அமர்ந்த அனைவருக்கும் முதலில் சோனா தான் செய்த மஸ்ரூம் சேமியா பிரியானியை பரிமாறினாள். அதை சாப்பிட்ட தாத்தா

   

”என்னம்மா இது பிரியானியா”

   

“ஆமாம் தாத்தா”

   

“பிரியானின்னா அரிசிதானே சேர்ப்பாங்க நீ சேமியாவை சேர்த்திருக்க”

   

“இப்படியும் செய்யலாம் தாத்தா ரொம்ப டேஸ்டாயிருக்கும்”

   

”ஆமாம் வித்தியாசமா நல்லாதான் இருக்கும்மா எனக்கும் இந்த மாதிரி மேற்கத்திய உணவுகள் அவ்வளவா பிடிக்காது ஆனா நீ இப்படியே செஞ்சிக்கிட்டு இருந்தா நானே உன் பக்கம் மாறிடுவேன் போல இருக்கு ரொம்ப நல்லாயிருக்கும்மா போய் நீயும் சாப்பிடு” என சொல்ல அவளும் சென்றாள்.

   

அடுத்து வந்தனா வந்தாள்.

   

கிராமத்து பெண்களிடம் சில சில நுணுக்கங்களை கற்றுக்கொண்டு அதை தன் சமையலில் புகுத்தியிருந்தாள்

   

அதை சாப்பிட்டதும் தாத்தா புரிந்துக்கொண்டார்

   

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.