நந்தினி மீது கோபமே வந்தது. அவள் உடனே தாத்தாவிடம்
”தாத்தா நானும்தான் அங்கிருந்தவங்களோட நல்லா பழகினேன் ஆனா நீங்க என்னோட மார்க் குறைவா எழுதியிருக்கீங்களே”
“விசயம் இருக்கும்மா நீ அவங்களோட பழகினதுக்கும் நந்தினி பழகினதுக்கும் வித்தியாசங்கள் இருந்திச்சி அதனாலதான் நான் இப்படி மார்க் போட்டிருக்கேன். இதுவும் நிலையானது இல்லையே மாறும் நீயும் கொஞ்சம் மாறு” என சொல்லிவிட்டு அவர் சென்றுவிட்டார்.
நந்தினியும் வழக்கம் போல் அனைவருக்கும் பால் காய்ச்சி மற்றவர்களிடம் கொடுக்க அவர்களும் குடித்துவிட்டு அமைதியாக தங்கள் அறைக்கு சென்றுவிட்டார்கள். அதன் பின் ரிஷிக்காக மட்டும் நட்ஸ்பால் தயாரித்தவள் அவனை காண ஸ்டெடி ரூம் சென்று மிக அதிக நேரம் கழித்து தன் அறையை அடைந்து இன்பமாக உறங்கினாள்.
Like & Follow our Facebook Page to be notified of the new episodes immediately.
தொடரும்.