ஆனால் வந்தனா காரில் ஏறியதிலிருந்து இறங்கும் வரை ரிஷியை பற்றியே பேசிக்கொண்டிருந்தாள். பவித்ராவிடம் அவரது மகன் ரிஷிக்கு பிடித்தது பிடிக்காதது என அனைத்தும் கேட்டு தெரிந்துக்கொண்டிருந்தாள்.
அடுத்து சோனாவின் காரில் அர்ஜூனும் ரிஷியும் வரும் வெள்ளியன்று நடக்கும் மீட்டிங் பற்றி பேசலானார்கள்.
”அர்ஜூன் அப்பா கலையிலதான் மீட்டிங் பத்தி சொன்னாரு. எப்பவும் மீட்டிங்கை நடக்கற அன்னிக்குதான் சொல்வாரு இன்னிக்கு என்னாச்சின்னு தெரியலை வர்ற வெள்ளிக்கிழமை மீட்டிங் பத்தி இப்பவே சொல்றாருன்னா ஏதோ முக்கியமான மீட்டிங்காதான் இருக்கனும் உனக்கு ஏதாவது தெரியுமா”
“இல்லைண்ணா எனக்கே நீங்க சொல்லித்தான் தெரியும் வேணும்னா கருணாவை கேட்கலாமே”
“சரி அவனுக்கு போன் பண்ணி என்ன ஏதுன்னு விசாரி இப்பவே”
”சரிண்ணா” என சொல்லியவன் கருணாவுக்கு போன் செய்தான்
”ஹலோ”
“ஹலோ கருணா நான்தான்”
“என்ன விசயம்”
“வர்ற வெள்ளிக்கிழமை என்ன மீட்டிங்”
”மீட்டிங்கா ஓ ஆமாம் ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு”