தொடர்கதை - ஒரு வீடு இரு வாசல் - 06 - சசிரேகா
ரோஜா சொன்னதைக் கேட்டு வெங்கடேசன் ஆனந்தை கோபத்துடன் பார்க்க அவனோ தலை குனிந்திருந்தான், அவன் கண்கள் கலங்கியிருப்பது கூட வெங்கடேசன் அறியவில்லை. ரோஜாவை பார்த்து
”சரி ரோஜா இதுக்கு மேல பேச எதுவும் இல்லை, நீ சொன்ன விசயங்கள் எனக்கு உதவியா இருக்கு, நீ போய் வேலையைப் பாரு“
”இல்லைண்ணா நான் இந்த வேலையை விட்டு போகலாம்னு இருக்கேன்“
”ஏன்”
”புது முதலாளிகிட்ட வேலை செய்ய எனக்கு பிடிக்கலைண்ணா”
”சரி சரி உனக்கு நான் வேற இடத்தில வேலை பார்க்கிறேன், அதுவரைக்கும் நீ இங்க வேலை செய்“
”க்ளர்க் வேலை மட்டும்தான் செய்வேன், அண்ணா வேற வேலையை நான் செய்றதாயில்லை“
”சரிம்மா அப்படியே செய்“
”எனக்கு சம்பளம் ஐம்பதாயிரம் வேணாம்“
”சரி”
”க்ளப்புக்கு நான் வரலை புதுமுதலாளியையே துணைக்கு கூட்டிட்டுப் போங்க”
”சரி சரி நீ வேணா இன்னிக்கு லீவு எடுத்துக்க, உன் முகம் சரியில்லை யாராவது பார்த்தா தப்பா நினைப்பாங்க, நாளைக்கு வா கிளம்பு அதுக்குள்ள நீ சொன்ன விசயங்களை வைச்சி மாற்றம் செய்யப் பார்க்கிறேன்”