”இல்லை மாமா எதிரியை கூட விட்டுடலாம் ஆனா துரோகியை பக்கத்தில வைச்சிருக்கனும், நான் அவருக்கு பேவரா இருக்கறதா அவர் நினைக்கட்டும், அப்பதான் அவரோட திட்டத்தை என்னால கண்டுபிடிக்கமுடியும்”
”ரோஜா இனிமேல நமக்கு உதவ மாட்டா பாவம் அவளை போய் அந்த பேச்சு பேசிட்டியே முட்டாளா நீ, அவளை எதுக்காக 5 மணி நேரம் நிக்க வைச்ச”
”சாரி மாமா அந்த நேரத்தில ஏதோ எனக்குத் தெரியாம“
”நிப்பாட்டு ரூபா விசயத்தை மனசுல வைச்சிக்கிட்டு பார்க்கற பொண்ணுங்களை எல்லாம் தப்பாவே நினைக்காத, உனக்குப் போய் நான் ரோஜாவை பார்த்தேனே என்னைச் சொல்லனும், பாவம் அவள் மனசுல வீணா ஆசையை வளர்த்துட்டேன், ஒவ்வொரு முறை உன்னைப்பத்தி பேசறப்பவும் அவள் முகம் மத்தாப்பூவா மலரும் ஆனா, இப்போ உன்னால அவள் அழறா சே சரியான சைக்கோடா நீ“
”மாமா அப்படி சொல்லாதீங்க, ரொம்ப கஷ்டமாயிருக்கு நான் வேணா ரோஜாகிட்ட சாரி கேட்கட்டுமா“
”இதுக்குள்ள நீ கேட்டிருக்கனும், சாரி கேட்க கூட நீ கூச்சப்படற, என்கிட்ட அனுமதி கேட்கறன்னா உன்னை எப்படி ஒரு பொண்ணு ஏத்துக்குவா, அதுலயும் ரோஜா கண்டிப்பா ஏத்துக்க மாட்டா, நீ சரியான முட்டாள் ஆனந்த்” என சொல்லிவிட்டு வெங்கடேசன் வெறுப்பாகி அங்கிருந்து சென்றுவிட தான் செய்த முட்டாள்தனத்தை எண்ணி ஆனந்த் வருந்தினான்.
அன்றைய நாள் ஆனந்திற்கு படுமோசமாக இருந்தது. வெங்கடேசன் அறையில் இருந்து தன் கேபினுக்கு வந்தான் சோர்வாக அவன் வந்ததும் செல்லப்பா உள்ளே வந்தார்
”சார் கவனிச்சீங்களா” என கேட்க ஆனந்த் சோகமான முகத்தை வைத்துக் கொண்டு