தொடர்கதை - தூறல் போல காதல் தீண்ட - 18 - சசிரேகா
போட்டியின் 7வது நாள்
காலையில் எழுந்ததும் வீட்டில் ஒரே கூச்சல் அந்த சத்தம் கேட்டு அறையில் உறங்கிக்கொண்டிருந்த 4 பெண்களும் எழுந்து வெளியே வந்துப்பார்க்க அங்கு அவர்கள் நேற்று கிராமத்தில் பார்த்த அனைத்து சொந்தக்காரர்களும் வந்திருந்தார்கள். உடனே அந்த 4 பெண்களுக்கும் சுறுசுறுப்பு ஒட்டிக்கொண்டு வேகமாக ஒருவருக்கு பின் ஒருவராக குளித்து ரெடியாக ஆரம்பித்தார்கள்.
அதில் மிருதுளா பாட்டியின் அறைக்கு சென்று குளித்து ரெடியாக ஆரம்பித்தாள். சோனா அதே அறையில் குளிக்க சென்றதால் வந்தனா பவித்ராவின் அறைக்கு சென்றாள். நந்தினி என்ன செய்வது என யோசித்துவிட்டு நேராக தன் அண்ணன் இருந்த ரிஷியின் அறைக்கு செல்ல அங்கு ரிஷி மட்டும் இருந்தான்
”ஐ வா வா என்ன திடீர்ன்னு என்னைப் பார்க்க வந்திருக்க”
“உங்களை பார்க்க வரலை அத்தான் குளிக்க வந்தேன்”
”ஏன் உன் ரூம்ல பாத்ரூம் இல்லையா”
“விளையாடாதீங்க அத்தான் வீட்ல சொந்தக்காரங்க வந்திருக்காங்க பார்த்தீங்களா”
“ம் பார்த்தேன் இப்பதான் 10 நிமிஷம் முன்னாடி வந்தாங்க”
“அவங்களை பார்த்ததால சோனா குளிக்க போயிட்டா பாத்ரூம் காலியில்லை அதான் நான் அண்ணாவை பார்க்க வந்தேன்”
“வந்தனா மிருதுளா எங்க குளிக்கறாங்க”
“பாட்டியோட ரூம்ல மிருதுளா போயிருக்கா உங்கம்மா ரூம்ல வந்தனா போயிருக்கா. நான் சுசித்ரா அத்தை ரூம்க்கு போனேன் ஆனா அங்க சித்தப்பா ரெடியாயிட்டு இருந்தாரு. அதான்