“வந்தனாவோட நடிப்பை பார்க்க முடியலை தாத்தா நீங்களே பார்த்து சந்தோஷப்படுங்க” என சொல்லிவிட்டு தன் அறைக்கு சென்றான்
”இன்னுமா குளிக்கறா” என யோசித்துக்கொண்டே வந்து கதவை தட்ட அது திறந்து கொள்ளவும்
”ஓ குளிச்சிட்டா போல ஆமா எங்க போனா ஒரு வேளை கிச்சனுக்கு போயிருப்பா” என நினைத்தவன் உள்ளே நுழைந்து கதவை சாத்தி தாப்பாள் போட்டவன் நேராக கட்டிலுக்கு வந்து டிவி பார்க்க ஆரம்பித்தான்.
நந்தினி வேகமாக குளித்து முடித்துவிட்டு அவசரமாக வெளியே வந்தாள். அறையில் இருந்த ரிஷியை பார்த்தவுடன் ஷாக்கானாள் நந்தினி
”அத்தான் நீங்களா” என அதிர்ச்சியில் கத்த சத்தம் வந்த திசையில் அவளை பார்த்தான். அவசரத்தில் குளித்ததால் வெறும் டவலுடன் தன் உடலை போர்த்திக்கொண்டு வெளியே வந்தவளை கண்டு ரசித்தவன் டிவியை ஆப் செய்தான்.
”என்னடி இப்படி வந்து நிக்கற” என ரிஷி அவளை ரசித்துக்கொண்டே கேட்க
“என்ன அத்தான் நீங்க வெளிய போனதா சொன்னீங்கள்ல இப்ப ஏன் வந்தீங்க” என கோபமாக கேட்க
“ஆமாம் வெளியே போய்ட்டு இப்பதான் வந்தேன். கதவு திறந்திருக்கவும் நீ போய்ட்டேன்னு நினைச்சேன் ஆனா நீ இப்படி இருப்பன்னு நான் நினைக்கவேயில்லை” என சொல்லிக்கொண்டே அவளிடம் நெருங்கி வந்தான். அவன் வந்ததைப்பார்த்து பாத்ரூமிற்குள் ஓடியவளை விரட்டி தானும் பாத்ரூமிற்குள் நுழைந்தான் ரிஷி.
மணி 8 ஆகியது அதற்குள் வந்தனா வந்திருந்த அனைவருக்கும் காபி டீ போட்டுக்கொடுக்க மிருதுளாவும் சோனாவும் அவர்களுக்கு டிபன் செய்ய சென்றார்கள். தாத்தா சோனாவிடம்