(Reading time: 22 - 44 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

   

காலை டிபனுக்கு சொந்தங்கள் அனைவரும் அமர்ந்துவிட சோனா முதலில் தான் செய்ததை பரிமாறினாள். காலையிலேயே காலிப்ளவர் பன்னீர் சீஸ் புலாவ் செய்திருந்தாள். அதை அனைவருக்கும் பரிமாற அந்த புதிய உணவின் ருசி வந்தவர்களுக்கு பிடித்திருந்தது. அவர்கள் வாயார பாராட்டினார்கள்.

   

அடுத்து வந்தனா வேண்டுமென்றே அவர்கள் நேற்று பரிமாறிய டிபனை பரிமாற முதலில் அவர்கள் பெரிதாக நினைக்காமல் சாப்பிட்டார்கள். அடுத்து மிருதுளா இட்லியும் சிக்கன் குழம்பும் பரிமாற ஆரம்பித்தாள். குழம்பு அதிகமாக இருக்க இட்லி அனைத்தும் தீர்த்துவிட்டது.  அந்நேரம் நந்தினி தான் செய்த இட்லியை மற்றவர்களுக்கு பரிமாறி சமன் செய்தாள். தான் செய்த சட்னியையும் சேர்த்து பரிமாறினாள். எப்படியோ அனைவருக்கும் டிபன் சரியாக போய்விட்டது.

   

அடுத்து மதியத்திற்கான சமையல் செய்ய தாத்தா அந்த 4 பெண்களையும் அழைத்தார்

   

”இங்க வந்திருக்கறவங்க நிறைய சாப்பிடுவாங்க அதனால நிறைய செய்யனும்  சோனா நீ காலையிலேயே புலாவ் பண்ணிட்ட ஆனா கொஞ்சமாதான் செஞ்ச இருந்தாலும் எல்லாரும் சாப்பிட்டாங்க ஆனா இப்ப நீ என்ன செய்யலாம்னு இருக்க” என கேட்க

   

”இந்த மாதிரி நிறைய பேருக்கு சமைச்சி எனக்கு பழக்கமில்லை தாத்தா” என சொல்ல 

   

”சரிம்மா ஆனா அவங்க வந்துட்டாங்களே நீ ஒண்ணு பண்ணு ஏதோ ஒரு டிஷ் பண்ணு போதும் பெரிசா கூட வேணாம் மேல்நாட்டு பாணி வேணவே வேணாம் புரியுதா”

   

”சரிங்க தாத்தா” 

   

சோனா மற்ற பெண்களிடம் பேசினாள்

   

”வந்தனா நீ என்ன செய்யப்போறன்னு சொல்லிடு அப்பதான் எங்களால மத்ததை செய்ய முடியும்” என கேட்க அதற்கு வந்தனா

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.