(Reading time: 22 - 44 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

   

”என்ன செய்றம்மா நீ”

   

“ஓ அதுவா அத்தான் எவ்ளோ பேர் இருக்காங்கன்னு எண்ணறேன் அத்தான். அப்பதானே அளவா சமையல் செய்ய முடியும்”

   

”எண்ற வேலைதானே நானே எண்ணி சொல்றேன் நீ போய் மிச்ச வேலையை பாரு இப்பவே டைம் அதிகமா இல்லை சீக்கிரமா போய் சமை”

   

“ஆனா அத்தான்”

   

“நீ போம்மா நான் எண்ணிட்டு வரேன்” என அன்பாக சொல்லவும் அவனை நம்பி அவள் கிச்சனுக்குள் சென்றாள்.

   

ரிஷியும் எண்ண ஆரம்பித்தான். வந்தவர்கள் வீட்டாள்களுடன் பேசியபடியும் வீட்டை சுற்றி பார்த்துக்கொண்டும் சிலர் அங்கும் இங்கும் நடந்துக்கொண்டிருந்தபடியால் அவர்கள் ஒருவரையே இரண்டு முறை எண்ணிவிட்டு 5 நிமிடத்தில் கிச்சனுக்குள் வந்த ரிஷியும் வந்தவர்களின் எண்ணிக்கையை இரண்டு மடங்காக  சொல்ல அவளும் சந்தேகத்துடன்

   

”அத்தான் அவ்ளோ பேரா வந்திருக்காங்க இல்லையே நான் காலையில பரிமாறும் போது பார்த்தேனே அத்தான்”

   

“அப்ப உன் அத்தான் நான் சொல்றதுல நம்பிக்கையில்லையா” என கோபமாக கேட்க

   

”சாரி அத்தான் நீங்க எப்பவும் கரெக்டாதான் சொல்வீங்க நான்தான் தப்பா புரிஞ்சிக்கிட்டேன் நான் இப்பவே சமைச்சிடறேன் அத்தான்” என சொல்லவும் ரிஷியும் நிம்மதியாக வெளியே சென்றுவிட்டான். 

   

அவன் சொன்ன கணக்குபடி நந்தினியும் அதிகமாக அரிசி வேகவைத்து சாதமாக்கினாள். அதற்காக அவளுக்கு தெரிந்த குழம்பும் ரசமும் செய்தாள் சிறிது சாதத்தை தனியா எடுத்து  

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.