”இங்க பாரும்மா நீ இப்படி சமைச்சி எங்களை அவமானப்படுத்திட்ட”
“என்ன சொல்றீங்க எனக்கு புரியலை நான் சமைச்சது சரியில்லையா”
“நீ சமைச்ச சமையல் நல்லாயிருந்திச்சி ஆனா நாங்க நேத்து உங்களுக்கு உபசரிச்ச உணவையே எங்களுக்கு நீ சமைச்சி போட்டா என்ன அர்த்தம் பாருங்க உங்க லட்சணம் உங்களை விட என்னாலயும் இன்னும் அருமையா சமைக்க முடியும்னு சொல்லாம சொல்ற மாதிரி இருக்கு” என ஒருவர் சொல்ல அதற்கு இன்னொரு பெண்மணி
”அதுமட்டுமா இப்படி நீ சமைக்கறதுக்காகதான் நீ நேத்து எல்லார்கிட்டயும் விழுந்து விழுந்து செய்முறையை கேட்டு தெரிஞ்சிக்கிட்டியா இப்படி நீ எங்களை அவமானப்படுத்துவேன்னு தெரிஞ்சிருந்தா நாங்க எதையும் சொல்லியிருக்க மாட்டோம்”
“இதுல போய் என்ன இருக்குங்க என்னோட திறமையை காட்டதானே நான் இப்படி செஞ்சேன்” என வந்தனா சொல்ல
”உன் திறமையை காட்டனும்னா உனக்கு தெரிஞ்சத செஞ்சிருக்கனும் இப்படி நாங்க செஞ்சதை எங்களுக்கே போட்டு காட்ட கூடாது. அதுலயும் காலைலதான் அப்படி செஞ்ச சரி ஏதோ நமக்கு காட்ட செஞ்சான்னு நினைச்சா நீ இப்பவும் அதே மாதிரி வீம்புக்கு செய்ற இது தப்பு என்னதான் நாங்க சொன்னமாதிரியே நீ சமைச்சிருந்தாலும் எங்க கைபக்குவம் உனக்கு வரலை அந்த ருசியும் வரலை”
“இல்லையே நீங்க சொன்ன எல்லாத்தையும் போட்டுதான் நான் செஞ்சேன்”
“அப்படியா வா வந்து இப்படி உட்கார்ந்து சாப்பிட்டு பாரு நாங்க செஞ்சதும் நீ செஞ்சதும் ஒத்துப்போதான்னு பாரு ஒத்துப்போகலைன்னா இப்ப நீ எங்களை அவமானப்படுத்தினதுக்கு மன்னிப்பு கேட்கனும் புரி்ஞ்சிதா”
என சொல்ல வந்தனா அதை ஒப்புக்கொள்ளாமல் சாப்பிட ஆரம்பித்தாள். அவளுக்கு