சொல்ல
சோனாவிற்கு சந்தோஷமாக இருந்தது.
அடுத்து வந்தனாவை பார்த்த தாத்தா
”யார்கிட்ட எதை நிரூபிக்க பார்த்த வந்தவங்ககிட்டயா ஆனா பாரு என்னாச்சின்னு உன்னோட திறமையை காட்ட உனக்கு தெரிஞ்சத செஞ்சி அசத்தியிருக்கனும் என்னவோ அவங்க செஞ்சத நீ செஞ்சி அவங்களை மட்டம் தட்ட நினைச்சியே ஆனா பாரு உன்னால அவங்க அளவுக்கு கூட உன்னால சமையலில் ருசியை காட்ட முடியலை அப்புறம் ஏன் நீ அவர்கள் செஞ்சதை போல சமைக்கனும்.
எப்பவுமே நீ செய்ற சமையல் அற்புதமா இருக்கும் அதையே நீ செய்திருந்தா இன்னிக்கு உனக்கு நல்ல பேரும் கிடைச்சிருக்கும் மார்க்கும் கிடைச்சிருக்கும் ஆனா நீ உன்னோட கெட்ட புத்தியால பாரு என்னாச்சின்னு. நான் உன்கிட்ட அடிக்கடி சொல்லிட்டேன் மத்தவங்களை பார்த்து எதையும் செய்யாதேன்னு ஆனா நீ கேட்க மாட்டேங்கற எல்லாரும் உன்னை புகழனும்னு ஆசைப்படற அதுக்காக நீ கஷ்டப்படற ஆனா உன்னோட கஷ்டம் மத்தவங்களுக்கு சந்தோஷத்தை தரனுமே தவிர அவமானத்தை தரக்கூடாது சரியா இன்னிக்கு நடந்ததை நீ கவனமா மனசுல வைச்சிக்கிட்டு இனி வர்ற நாட்கள்ல சொதப்பாம இரு” என சொல்லவும் அவளும் சரியென தலையாட்டினாள்.
அடுத்து மிருதுளா
”என்னம்மா உன்னோட ஆசை தீர்த்திச்சா”
“தாத்தா எதை சொல்றீங்க”
“அதான்மா நான்வெஜ் சாப்பிடனும்னுங்கற ஆசை. ம் ப்ரிட்ஜை திறந்து பார்த்தேன் ஒரு அசைவம் கூட இல்லை மொத்தத்தையும் காலி பண்ணியிருக்கியே எனக்கு ஒரு சந்தேகம் நாளைக்கு காலையில டிபன் எப்படி சாப்பிடுவ உனக்குதான் நான்வெஜ் இல்லைன்னா சாப்பாடே இறங்காதே என்ன செய்வ சொல்லு” என கேட்க அப்போதுதான் அவளுக்கு அது