டின்னர் நேரத்தில் மதியம் மிச்சம் இருந்த உணவை மறுபடியும் சூடாக்கி சாப்பிட்டு முடித்து காலியும் செய்தார்கள். தாத்தாவும் சாப்பிட்டு முடித்த கையோடு மார்க் எழுதும் போர்டிடம் சென்றார்.
பெயர்கள் சோனா வந்தனா மிருதுளா நந்தினி
சமையல் 100 30 100 100
ஒழுக்கம் 70 30 60 80
சுபாவம் 50 40 30 80
பணிவு 50 30 30 80
புத்திசாலித்தனம் 100 0 50 70
அனுசரித்தல் 70 0 50 100
சகிப்புதன்மை 70 40 30 90
மொத்தம் 700க்கு 510 170 350 600
அட்டவனையில் முதலில் அதிக மதிப்பெண்ணில் நந்தினியும் அடுத்து சோனா அடுத்து மிருதுளா கடைசியாக வந்தனா வந்தாள்.
சோனாவிற்கும் நந்தினிக்கும் நிறைய 100 மார்க் போட்டிருந்த காரணத்தால் வந்தனா இம்முறை சோனாவையும் வெறுக்க ஆரம்பித்தாள்.
தாத்தா அந்த 4 பெண்களையும் ஹாலில் இருந்த சோபாவில் அமர சொன்னார். அவர்கள் அமர்ந்ததும் தானும் சென்று அவர்களுக்கு எதிராக அமர்ந்துக்கொண்டார். வீட்டில் இருந்தவர்களும் அமர்ந்துக்கொண்டார்கள்.
முதலில் தாத்தா சோனாவிடம்
”இன்னிக்கு நீ நிறைய டிஷ்கள் செஞ்சி அசத்தலைன்னாலும் ஒண்ணு செஞ்சி நல்ல பேர் எடுத்த அதுலயும் புத்திசாலித்தனமா நீ செஞ்ச நூடுல்ஸ் பாயாசம் டிஷ் எல்லாருக்கும் பிடிச்சிருந்தது. அவங்களோட நீ நல்ல விதமாவும் பழகின நேத்தே உன்னை பத்தி அவங்க தங்கள் கருத்தை என்கிட்ட மறைமுகமா சொன்னாங்க இன்னிக்கும் அவங்க என்கிட்ட சொல்லிட்டுதான் போனாங்க. பழகற விதத்தில நீ சரியா ஒட்டலைன்னாலும் அழகும் புத்திசாலித்தனமும் இருக்குன்னு சொன்னாங்க. நல்லா சமைக்கறேன்னும் சொன்னாங்க” என