அவளிடம்
”நீ ஒரு தப்பு பண்ணிட்ட தெரியுமா”
“தெரியும் தாத்தா சாதத்தை ரெண்டு மடங்கா அதிகமா செய்துட்டேன்”
“ஆமாம் ஏன் அப்படி செஞ்ச”
“அது தாத்தா எவ்ளோ பேர் இருக்காங்கன்னு எண்றப்ப நான் தப்பா எண்ணிட்டேன்”
“பொய் சொல்லாத ரிஷி எண்ணினதை நான் பார்த்தேன் அதை உன்கிட்ட அவன் சொன்னதை சுசித்ராவும் பார்த்திருக்கா நான் வந்த நாளே என்ன சொன்னேன் யாரும் உதவக்கூடாதுன்னு அதையும் மீறி ரிஷி செய்றான் நீ உடனே வேண்டாம்னு சொல்லியிருக்கலாம்ல”
“தாத்தா நான் சொன்னேன் அவர்தான் கேட்கலை”
“நீ அவன்கூட நிறைய நேரம் இருக்க அதை முதல்ல குறைச்சிக்க அர்ஜூன் என்கிட்ட வந்து புலம்பறான்”
“தாத்தா நான் போனாலும் அவர் விடமாட்டேங்கறாரு இன்னிக்கு கூட அவரு அவரு” என தயங்க
”எனக்கு புரியுது இருந்தாலும் கொஞ்ச நாள் பொறுத்துக்கம்மா. ரிஷிக்காகதான் நானும் பல வேலைகளை செய்றேன் கஷ்டமான போட்டிகளா வைக்கிறேன் ம் பார்க்கலாம் யாராவது ஒருத்தி தான் ஜெயிப்பா உன் அதிர்ஷ்டம் எப்படியிருக்குன்னு நானும் பார்க்கறேன் நீ போய் தூங்கும்மா” என சொல்ல அவளும் தாத்தா சொன்னதை பற்றியே யோசித்துக்கொண்டே உறங்கலானாள்.
போட்டியின் 8வது நாள்
தாத்தா நேற்றே அதிகமான சாப்பாடு சாப்பிட்டதால் வயிறு கோளாறுக்கு ஆளாகி இன்று ஒரு