(Reading time: 22 - 44 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

   

”நான் சைவ விருந்து கொடுக்கப்போறேன் நேத்து அவங்க நமக்கு விருந்து வைச்சாங்களே அதையே வைக்கப்போறேன்” என சொல்லிவிட்டு அவள் சென்றுவிட்டாள். அவள் சென்றதும் சோனா மிருதுளாவிடம்

   

“சரி மிருதுளா நீ என்ன செய்யப்போற”

   

“நான் அசைவம் சமைக்கப்போறேன் ப்ரிட்ஜ்ல இருக்கற எல்லாத்தையும் பயன்படுத்திக்கபோறேன் இப்பவே போனாதான் மதியத்துக்குள்ள செஞ்சி முடிக்க முடியும் நான் கிளம்பறேன்” என சொல்லிவிட்டு அவள் பறந்தாள்.

   

“சரி நந்தினி இப்ப நீயும் நானும்தான் என்ன செய்யலாம்னு சொல்லு”

   

“மிருதுளா போறதை பார்த்தா ஏதோ சந்தேகம் வருது. அவள் கவனமெல்லாம் இங்க இல்லை அசைவம் செய்றதில இருக்கு அதனால நான் சிம்ப்ளா பிரைட் ரைஸ் பண்ணிட்டு மிருதுளா என்ன செய்றாள்னு பார்க்கப்போறேன் ஆனா இங்க வந்தவங்க எவ்ளோ பேர் இருக்காங்கன்னு தெரியலை நான் முதல்ல போய் எண்ணிடறேன்” என நந்தினி சொன்னாள்.

   

”எதுக்கு எண்ற காலையில நீ டிபன் பண்ணியே” என்றாள் சோனா

   

“இல்லை காலையில நான் எவ்ளோ பேர் இருக்காங்கன்னு சரியா பார்க்கலை அதனால குறைவாதான் இட்லி வைச்சேன் மிருதுளா இட்லி பத்தலைன்னு சொன்னாதால என்னோடதை நான் பரிமாறிட்டேன். இல்லைன்னா என்னோடதும் பத்தியிருக்காது”

   

“ஓ சரி அப்ப நானும் எதையாவது செய்றேன்” என சொல்லிவிட்டு கிச்சனுக்குள் சென்றவளுக்கு ஒன்றுமே பிடிபடவில்லை. அவள் கூகுளில் தேடி தேடி பிடித்தும் எதுவும் அவளுக்கு பிடித்தமாதிரி கிடைக்க வில்லை.

   

நந்தினியோ ஹாலில் நின்றுக்கொண்டு வந்த சொந்தங்களை விரல் காட்டி காட்டி எண்ணிக் கொண்டிருந்தாள். அதைக்கவனித்த ரிஷி ஆசையாக அவளிடம் வந்தான்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.