”ரொம்ப சந்தோஷம்”
“சரி நந்தினி கூடவா வரலை”
“குளிச்சிட்டிருப்பா வருவா அதோ அங்க பாருங்க ஒருத்தி வந்துட்டா”
ஹாலுக்கு வந்த வந்தனா அங்கிருந்த அனைவரையும் நட்பு முறையில் உபசரித்துக்கொண்டிருக்க அதை தாத்தா பார்த்துவிட்டு ரிஷியிடம்
”டேய் ரிஷி இவள் செய்றத பார்த்தாலே இயல்பா தெரியலைடா ஏதோ செயற்கையா நடிக்கற மாதிரி இருக்கு”
“எனக்கும் அப்படிதான் தெரியுது”
“நேத்து நான் மார்க் குறைச்ச காரணத்தால இப்படி அதிகமாக உபசரிக்கறாளா”
“இருக்கலாம் தாத்தா பொறுங்க இப்படி விழுந்து விழுந்து வேலை செஞ்சாள்னா கண்டிப்பா ஒரு இடத்தில சொதப்புவா அப்ப மார்க் குறைக்கலாம்”
”அதுக்காகதான் நானும் பார்க்கறேன் மாட்ட மாட்டேங்கறாடா” என சொல்லும் போதே சோனாவும் மிருதுளாவும் வந்து அங்கிருந்தவர்களிடம் கலந்து பேசிக்கொண்டிருக்க தாத்தா ரிஷியிடம்
”டேய் எங்கடா உன் ஆளு”
“தெரியலையே வந்துடுவா தாத்தா நான் என் ரூமுக்கு போறேன்”
”ஏன் இங்கயே இரு”