(Reading time: 22 - 44 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

நேராக ரிஷியின் அறைக்கு சென்றான். கதவு மூடியிருக்கவும் கதவை தட்டினான்

   

”அண்ணா அண்ணா” என கத்தினான். சில நொடிகளில் கதவை திறந்துக்கொண்டு வெளியே வந்தாள் நந்தினி. அவளைப்பார்த்து அதிர்ந்தான் அர்ஜூன்

   

”நீ என்னம்மா இந்த ரூம்லயிருந்து வர்ற”

   

“அது பாத்ரூம்ல குளிக்க வந்தேன் அண்ணா” என அவள் விட்டு விட்டு பேசவும் அவனுக்கு கஷ்டமாகி போனது. அவனுக்கும் ஏதோ புரிந்துவிட 

   

”எல்லாரும் வந்துட்டாங்க மத்த பொண்ணுங்களும் டிபன் செய்ய போயிட்டாங்க போம்மா போய் டிபன் பண்ணு போ” என விரட்ட அவளும் அங்கிருந்து சென்றுவிட்டாள். அவள் சென்றதும் அர்ஜூனுக்கு கோபம் அதிகமாகி இன்று ரிஷியை கொல்ல நினைத்து அறைக்குள் சென்றான். 

   

ரிஷியோ நந்தினியுடன் இருந்த நேரத்தை நினைத்து சந்தோஷமாக சிரித்துக் கொண்டே அர்ஜூனை வரவேற்றான்

   

”வாடா நண்பா” என பாசமாக அழைக்க

   

”பாவி மித்ர துரோகி உன்னை நம்பி என் தங்கச்சியை நான் விட்டா நீங்க இப்படியா செய்வீங்க”

   

“அதான் நீ பண்ண தப்பே, ஒழுங்கா என்னை என் போக்கில விட்டிருந்தா நான் அமைதியா இருந்திருப்பேன் என்னை நீ தடுக்க தடுக்க கிடைச்ச வாய்ப்பை பயன்படுத்திக்கிட்டேன்” என அவன் கூலாக சொல்லவும் அர்ஜூன் அவனது சட்டையை பிடித்து உலுக்க ரிஷியும் அவனுடன் சண்டை போட இருவரும் தரையில் உருண்டு புரண்டு கத்திக் கொண்டே சண்டையிடவும் சத்தம் கேட்டு தாத்தா வந்து இருவரையும் தடுத்தார்.

   

”என்னடா உங்களோட தொல்லையா போச்சி வாங்கடா வெளிய” என இருவரையும் அழைத்துக் கொண்டு வெளியே வந்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.