”நல்லாவே புரியுது மாமா ஆனா, இப்ப பசிக்குது என்ன செய்யலாம்”
”நீ ஒருத்தன் வா” என ஆனந்தை அழைக்க அவனோ ரோஜாவை பார்க்க அவளோ முகத்தை திருப்பிக் கொண்டாள் கோபமாக அவளின் அந்த சின்ன கோபத்தை வெகுவாக ரசித்தபடியே வெங்கியுடன் சென்றான் ஆனந்த்.
இருவரும் கான்டீன் சென்றார்கள், இவர்களைக் கண்டதும் அந்த இடமே நிசப்தமானது. வெங்கியோ
”எதுக்கு எல்லாரும் அமைதியாயிட்டீங்க பேசிக்கிட்டே சாப்பிடுங்க” என சொல்ல அனைவரும் அமைதியை வெகுவாக கையாண்டார்கள்.
ஆனந்தோ அரக்க பரக்க சாப்பிட வெங்கியோ
”ஆனந்த் பொறுமையா சாப்பிடு என்னவோ பல நாள் பட்டினி மாதிரி நடந்துக்கற”
“மாமா ஆபீஸ்ல ஏகப்பட்ட வேலையிருக்கு ஏதோ நீங்க கூப்பிட்டீங்களேன்னு சாப்பிட வந்தேன்”
”லன்ச் டைம் இன்னும் இருக்கு”
”அதுக்குன்னு எவ்ளோ நேரம்தான் சாப்பிடறது வேலை முக்கியம், இங்கிருக்கறவங்களுக்குதான் இந்த விசயம் தெரிய மாட்டேங்குது உங்களுக்குமா, எனக்குத் தெரிஞ்சி லன்ச் டைம் வெறும் அரை மணி நேரம்னு ஒதுக்கிடனும், ஒரு மணி நேரம் கொடுத்தாலும் எல்லாரும் என்ன செய்றாங்க அரை மணி நேரம் சாப்பிட்டு மீதி நேரம்லாம் கதைதானே பேசறாங்க அதை விட அந்த நேரத்தில உருப்படியா வேலை செய்யலாம்ல, நீங்க வேற எல்லாருக்கும் சம்பளத்தை உயர்த்திட்டீங்க அதுக்கு நன்றி விசுவாசம் கூட இல்லாம எவ்ளோ சத்தமா கதை பேசிக்கிட்டு சாப்பிடறாங்க