வந்தது
”உங்க மாமாகிட்டயிருந்து ரோஜாவை பிரிச்சிட்டீங்க போல இருக்கே” என சொல்ல ஆனந்த் வியந்தான்
“அட அட அட உங்க அறிவே அறிவுதான் எப்படி சட்டுன்னு கண்டுபிடிச்சிட்டீங்க“
”பார்த்தாலே தெரியுது சார் ஆனாலும் ரோஜாவை இப்படியே விடகூடாது சார்“
”அதுக்காக அவளை என்ன செய்யலாம்னு நினைக்கறீங்க”
”அவளை உங்க மாமா பக்கமே வரவிடாம செய்யனும் சார், அவளை உங்ககிட்டயே வைச்சி கண்காணிங்க சார்”
”இது நல்ல ஐடியாவா இருக்கே, இதுக்குதான் செல்லப்பா வேணும்ங்கறது நான் முடிவு பண்ணிட்டேன், எப்படி எங்க மாமா உங்களை நம்பி அவர் பிஏவா வைச்சிருக்காரோ நானும் ரோஜாகிட்டயிருந்து என் மாமாவை காப்பாத்த அவளை நான் என் பிஏவா என் கண் பார்வையில வைச்சிக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன், இதைப்பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க செல்லப்பா“
”சார் சூப்பர் சார் நீங்க எங்கயோ போயிட்டீங்க சார்”
”புகழாதீங்க எனக்கு கூச்சமா இருக்கு“
”சார் அருமையான யோசனை சார், உடனே இதை நிறைவேத்துங்க சார்“
”அவசரப்படாதீங்க செல்லப்பா இது சம்பந்தமா நான் என் மாமாகிட்ட ஒரு வார்த்தை கேட்கனும், அவரும் இங்க பார்ட்னர் இல்லயா“
”ஓ சரி சரி கேளுங்க ஆனாலும் உங்க மாமா இதுக்கு ஒத்துக்க மாட்டாரு அடம்பிடிப்பாரே”