(Reading time: 23 - 46 minutes)
Oru veedu iru vaasal
Oru veedu iru vaasal

சொல்ல வெங்கியோ

   

”என்னவோ நினைச்சி உன்னை வேலைக்கு சேர்த்தேன், உன்னால கம்பெனிக்கு பல நன்மைகள் நடந்திருக்கு ஆனா, உனக்கு இந்த கம்பெனியால கெடுதல் மட்டும்தான் நடந்திருக்கு, நான் தப்பு செய்துட்டேன் ரோஜா, உன்னை நான் பகடைகாயா பயன்படுத்தியிருக்க கூடாது”

   

”அய்யோ எதுக்கு சார் இவ்ளோலாம் உணர்ச்சி வசப்பட்டு பேசறீங்க விடுங்க நான் என் கடமையைதானே செய்தேன், யார் என்ன சொன்னாலும் எனக்கு கவலையில்லை சார், என் மனசாட்சிக்கு நான் கரெக்டா இருக்கேன் அது போதுமே”

   

”ஆமாம் அதுவே போதுமே” என ஆனந்த் சொல்லியபடியே நடுவில் நுழைந்தான். அவனின் வரவை இருவரும் விரும்பவில்லை முகத்தை திருப்பிக் கொண்டார்கள்

   

”ஏன் இப்படி என்மேல வெறுப்பை காட்டறீங்க நான் பாவம்லயா” என கெஞ்சுவது போல பேச வெங்கியோ நொந்துப் போய் நீண்ட பெருமூச்சுவிட்டு

   

”உனக்கு என்ன வேணும் இப்ப”

   

”ஒண்ணுமில்லை மாமா பசிக்குது உங்ககூட சாப்பிடலாம்னு வந்தேன் நீங்க இல்லை அதான் இங்க வந்தேன்”

   

”எனக்கு பசிக்கலை ஆனந்த் நீ போய் கான்டீன்ல சாப்பிடு“

   

”இப்படி சொன்னா எப்படி, ரோஜா இதுநாள் வரை செய்த வேலையை இனிமேல நாமதானே செய்யனும், அதாவது எல்லாரையும் கண்காணிக்கற வேலையை சொன்னேன்“

   

”அவசியம் இல்லை ஆனந்த் கம்பெனி இப்ப நல்லாவே நடக்குது, நீ எதையும் செய்து குழப்பிடாத இப்பதான் வேலை செய்றவங்களுக்கு சம்பளம் உயர்த்தியிருக்கேன் அதனால யாரும் எந்த தவறும் செய்ய மாட்டாங்கன்னு நம்பறேன், கொஞ்ச நாள் போகட்டும் ஏதாவது வில்லங்கம் வந்தா பார்த்துக்கலாம் புரிஞ்சுதா”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.