(Reading time: 23 - 46 minutes)
Oru veedu iru vaasal
Oru veedu iru vaasal

அங்கு வெங்கடேசனோ சுதாகரை அழைத்து பேசிக் கொண்டிருந்தான். 

   

”சுதாகர் இந்த ஆபீஸ்ல உங்களோட தேவை அதிகம், நீங்க எங்களுக்கு ரொம்ப விசுவாசமா இருந்திருக்கீங்க உங்களோட அனுபவத்தால நிறைய லாபம் கிடைச்சிருக்கு, அதனால உங்க சம்பளத்தை நான் உயர்த்தலாம்னு இருக்கேன், இப்போ நீங்க வாங்கற சம்பளத்தை அப்படியே இரண்டு மடங்கா மாத்தப்போறேன் உங்களுக்கு சந்தோஷமா” என கேட்க சுதாகர் ஆனந்தக்கண்ணீர் விட்டு கைகூப்பி

   

”ரொம்ப நன்றி சார்“

   

”எதுக்கு கைகூப்பறீங்க உங்களோட திறமைக்கு கிடைச்ச அங்கீகாரம் இது அவ்ளோதான், எப்பவோ நான் எல்லார் சம்பளத்தையும் ஏத்தனும்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன் ஆனா, என் ஒருத்தனால மட்டும் என்ன செய்ய முடியும், நான் இங்க பாதி பார்ட்னர்தானே ஆனந்த் வந்த பின்னாடி அவன் சம்மதத்தோட செய்யலாம்னு காத்திருந்தேன் ஆனந்த் இப்ப வரவும் எல்லாருக்கும் சம்பளம் ஏத்த முடிவு பண்ணிட்டேன்”

   

”ஓ அப்படியா சே நான் ஒரு முட்டாள் உங்களோட நல்ல எண்ணத்தை புரிஞ்சிக்காம நான் பாட்டுக்கு பணத்துக்காக வேற இடத்தில வேலைக்கு போகலாம்னு இருந்தேன் சார்“

   

”அப்படியா எதனால இந்த எண்ணம் வந்தது

   

”என் குழந்தைக்கு ஹார்ட்ல ப்ராப்ளம், ஆப்ரேஷன் செய்யனுமாம் நிறைய பணம் தேவைப்படுது, அதனால பேங்க்ல லோன் எடுக்கலாம்னு இருந்தேன் ஆனா பேங்க்ல நான் வாங்கற சம்பளம் போதாதுன்னு சொல்லிட்டாங்க, என்ன செய்றது ஏது செய்றதுன்னு தெரியாம தவிச்சேன், அந்நேரம் இன்னொரு கம்பெனியில இருந்து எனக்கு ஆபர் வந்தது, அதிக சம்பளம் தர்றதா சொன்னாங்க, நானும் சரி போகலாம்னு முடிவும் எடுத்துட்டேன் ஆனா, நீங்களே என் சம்பளத்தை உயர்த்தி தர்றப்போ நான் வேற எங்கயும் போக மாட்டேன் சார், என்னோட சூழ்நிலையாலதான் இது போல தப்பான முடிவு எடுத்துட்டேன், இன்னிக்கு சொல்றேன் சார், இத்தனை நாள் போல இனிமேலயும் நான் விசுவாசமா இங்க வேலை செய்வேன் என்னை நம்புங்க சார்”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.