”சரி இருக்கேன் ஆனா பார்ட்னரா இல்லை முதலாளியாவும் இல்லை, எனக்கு ஒரு போஸ்டிங் கொடு”
”ஏன் மாமா இப்படி பேசறீங்க”
”இல்லை நீ ரோஜா விசயத்தில நடந்துக்கிட்ட மாதிரி என்கிட்ட நடக்க கூடாதுல்ல“
”வார்த்தையால கொல்லாதீங்க மாமா ப்ளீஸ்“
”சரி இதைப்பத்தி நாம அப்புறமா டிஸ்கஸ் பண்ணலாம், ரோஜா சொன்ன விசயங்களைப் பத்தி என்ன நினைக்கற”
”அவள் நிறைய சொன்னா நீங்க எதை கேட்கறீங்க கல்யாணத்தை பத்தியா”
”கல்யாணமா அது இல்லை, சுதாகர் பத்தி”
”தாராளமா அவருக்கு உதவி செய்ங்க மாமா அப்படியே எல்லாருக்கும் சம்பளம் உயர்த்துங்க, நான்தானே அந்த செல்லப்பாவை வேலைக்கு வைச்சேன் அவரை நானே அடக்கி ஒடுக்கறேன்“
”அது அவ்ளோ சுலபமில்லை அந்தாளு ஒரு விஷம், அவரை பகைச்சிக்காத உசுரை கூட எடுத்துடுவான்”
”பார்க்கலாம் மாமா”
”சரி உன்னை க்ளப்புக்கு போகதேன்னு நான் சொன்னேன் நீ ஏன் போன”
”செல்லப்பா பேச்சைக் கேட்டு போனேன், அதான் நான் செய்த பெரிய தப்பு”
”முதல்ல செல்லப்பாவோட பழகறதை நிப்பாட்டு“