”என்னை கேட்டா நான் என்ன செய்றது”
”ஹெல்மேட் எங்கடி“
”வீட்ல இருக்கு“
”வீட்ல வைச்சி பூஜை போடறியா“
”பத்திரமா வைச்சிருக்கேன்”
”அதை போட்டுக்கிட்டு வரலாம்ல“
”அதை போட்டா அக்கம் பக்கம் பார்க்க முடியலை”
”இப்ப பாரு ஃபைன் போட்டிருக்காங்க“
”இப்ப என்ன உனக்கு ஃபைன்தானே அடுத்த மாசம் சம்பளம் வந்ததும் பணத்தை கொடுத்துடறேன்“
”நான் அதுக்கு சொல்லலை ஹெல்மேட் இல்லாம நீ பாட்டுக்கு வர்றியே, வழியில விபத்தானா என்ன செய்வ இதுல இன்சூரன்ஸ் கூட கட்டலை”
”உன் வாயில நல்ல வார்த்தையே வராதா நேத்து ராத்திரி என்னவோ முதலிரவு பத்தி பேசிட்டு இப்ப என்னடான்னா விபத்து பத்தி பேசற, நான் நல்லாயிருக்கறதே உனக்கு பிடிக்கலையா சே நீயெல்லாம் ஒரு மனுஷனா வழியை விடு நான் போகனும்” என கத்திவிட்டு அவள் வண்டியை ஓட்டிக் கொண்டு தப்பித்தோம் பிழைத்தோம் என சென்றே விட அவள் பேசியதைக் கேட்டு ஆச்சர்யத்தில் சிலையாகிப் போனான் ஈஸ்வரன்.
Like & Follow our Facebook Page to be notified of the new episodes immediately.
தொடரும்...