தொடர்கதை - பெண்ணென்னும் பொன்னழகே - 03 - சசிரேகா
எதையோ சாதித்த திருப்தியுடன் உற்சாகமாக கடைக்குள் நுழைந்தாள் பூங்கொடி அன்று பரந்தாமன் வரவில்லை ராகவன்தான் இருந்தான், பூங்கொடியின் மகிழ்ச்சி அவனை ஈர்த்தது.
”என்ன பூங்கொடி ரொம்ப சந்தோஷமா இருக்க என்ன விசயம்” என கேட்க அவளின் மகிழ்ச்சி தொலைந்தது. இறுகிய முகத்துடன் தன் இடத்திற்கு வந்து அமர்ந்து வேலையில் ஈடுபட்டாள்
”கணக்கு வழக்கெல்லாம் அப்புறம் பார்க்கலாம், குடோன்ல எவ்ளோ ஸ்டாக் இருக்குன்னு கணக்கு பார்த்து லிஸ்ட் எடுத்து கொடு” என சொல்ல அவளோ சந்தேகமாக அவனைப் பார்க்க
”அப்பாதான் லிஸ்ட் எடுக்கச் சொன்னாரு, நானே போய் லிஸ்ட் எடுக்கறேன்னா என்னை நம்பலை உன்னை நம்பி நீ வந்ததும் இந்த வேலையை செய்யச் சொல்லிட்டு போயிருக்காரு” என சொல்ல அவளோ உடனே போன் எடுத்து பரந்தாமனுக்கு டயல் செய்ய அவனோ அதிர்ந்தான்
”ஏய் இரு, யாருக்கு போன் பண்ற நீ”
”ஐயாவுக்குதான்“
”ப்ச் நான் சொல்றதுல உனக்கு நம்பிக்கையில்லையா”
”சுத்தமா இல்லை“
”என்கிட்ட வேலை செய்ற உனக்கு இவ்ளோ திமிரா”
”நான் வேலை செய்றேன், அதுக்கு நீங்க சம்பளம் தர்றீங்க, லிமிட்ல இருங்க, தேவையில்லாம என்கிட்ட தப்பா நடந்துக்கிட்டா அதை பார்த்துக்கிட்டு நான் சும்மாயிருக்க மாட்டேன் சொல்லிட்டேன்“
”ஓ என்னையே எதிர்க்கற அளவுக்கு வந்துட்டியா”