இருந்தா சரின்னு அவளை நம்ம வண்டியில ஏத்திக்கிட்டு போனேன்”
”ம்ம்”
”போறப்ப என் குழப்பத்தை அவள்கிட்ட சொன்னேன் அதைக்கேட்டதும் அவளுக்கும் அதிர்ச்சியா இருந்தது ஈஸ்வரா” என சொல்ல அவன் அதற்கு ஆச்சர்யப்படவில்லை இயல்பாக எடுத்துக் கொண்டான்
”ம்ம்ம்”
”அப்புறம் அவளே என் குழப்பத்துக்கு ஒரு வழி சொன்னா”
”என்ன சொன்னா”
”ம் உன் மேலநம்பிக்கையில்லாம ஏன் இப்படி நடந்துக்கறீங்க, உன் மேல சந்தேகப்படலாமா நம்புங்க மாமா கருணாவோட கல்யாணத்தை பாருங்கன்னு சொன்னா அவள்கிட்ட பேசினபின்னாடி எனக்கு ஒரு தெளிவு வந்தது, தேவையில்லாம சாமியார் பேச்சைக் கேட்டு உன்னை சந்தேகப்பட்டது என் தப்பு“
”அதெல்லாம் விடுங்கப்பா இப்ப நீங்க தெளிவாயிட்டீங்கள்ல, அது போதும் எனக்கு முதல்ல அண்ணன்கள் கல்யாணத்தை பாருங்க”
”என்னத்த பார்க்கறது வரனே தேடி வரும்னு சாமியார் சொல்லிட்டாப்ல வரட்டும் பார்த்துக்கலாம்” என சொல்லியவர் அவனிடம் வண்டி சாவியை தந்துவிட்டு கிளம்பிச் சென்றார் அவனும் பூங்கொடியின் பதிலால் சற்று குழம்பிப்போனான்.
இரவு 9 மணிக்கு நகைகடை சாத்தப்பட பூங்கொடி தன் அண்ணியின் செயலை நினைத்தபடி தொய்வாக நடந்து சென்றாள் அவளை வழி மறித்தான் ராகவன்
”வா பூங்கொடி நான் உன்னை ட்ராப் பண்றேன்“