(Reading time: 23 - 46 minutes)
Pennennum ponnazhage
Pennennum ponnazhage

”என் இடத்தில யார் இருந்தாலும் இப்படித்தான் நடந்துக்குவாங்க“

   

”பேச்செல்லாம் நல்லாதான் இருக்கு ஆனா செயல் சரியில்லையே”

   

”என்ன உளர்றீங்க”

   

”பின்ன நகையை வாங்கினா மாசாமாசம் அதுக்கு பணம் கட்டனும்னு நினைப்பு இல்லையோ”

   

”நகையா எந்த நகை”

   

”ஓ இதுதான் உன் நேர்மையா”

   

”ப்ச் நீங்க சொல்றது எனக்குப் புரியலை”

   

”புரியும் இதை பாரு” என சொல்லி அவன் ஒரு ரசீதை நீட்ட அதை வாங்கிப் பார்த்து திடுக்கிட்டாள் பூங்கொடி

   

”இது இது”

   

”போன மாசம் நீ பேங்க்குக்கு போயிருந்த நேரம் உன் அண்ணி இந்த கடைக்கு வந்து இந்த செயினை வாங்கிட்டு மாசாமாசம் பணம் கட்டற மாதிரி வெறும் ஆயிரம் ரூபாய் தந்துட்டு உன்னை பத்தி சொல்லவும் என் அப்பாவும் உன்னை நம்பி அந்த ஆயிரம் ரூபாயை வாங்கி வைச்சிக்கிட்டு, 3 சவரன் நகையை கொண்டு போயிட்டாங்க, ஒரு மாசம் ஆச்சி அடுத்த தவணையை அவங்க கட்டலை எப்ப அவங்க கட்டுவாங்க” என கேட்க அவளுக்கு அவமானமாகிப் போனது.

   

”இதைப்பத்தி எனக்கு எதுவும் தெரியாது”

   

”இதை சொன்னா என் அப்பா வேணா நம்புவாரு ஆனா நான் நம்ப மாட்டேன்”

   

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.