தொடர்கதை - பெண்ணென்னும் பொன்னழகே - 04 - சசிரேகா
ஈஸ்வரனுடன் உரையாடிய மகிழ்ச்சியில் திளைத்தபடியே நகைகடையை அடைந்தாள் பூங்கொடி. கடைக்கு வெளியே பார்க்கிங்கில் உயர்ரக கார்கள் நான்கைந்து வரிசையாக நிற்பதைக்கண்டு வியந்தாள், அதன் நெம்பர் ப்ளேட் பார்த்து அதிர்ந்தாள் அவசர அவசரமாக தனது ஸ்கூட்டியை ஓரம் கட்டி நிற்க வைத்துவிட்டு பரபரவென உள்ளே நுழைந்தாள். அதற்குள் மணி 09.05 என காட்டிவிட்டது. அதைக் கண்டு அவள் அதிர அவள் வந்ததைக்கண்ட கடை பையன் அவளிடம் வந்து
”பூங்கொடி அக்கா முதலாளி உங்களை வரச் சொன்னாரு”
”5 நிமிஷம்தானே லேட்டா வந்தேன் அதுக்கேவா“
”இல்லைக்கா இது வேற விசயம் கணக்கு வழக்கு பார்க்க கூப்பிடறாங்க”
”ஆமா வெளிய நிக்குதே வண்டிங்க அது“
”அது தெரியாதாக்கா பெரியாளுங்க வந்திருக்காங்க”
”அப்போ உள்ள மீட்டிங் நடக்குதா”
”ஆமாம்கா அதுக்குதான் உங்களை வரச்சொன்னாங்க“
”சரி சரி நான் போய் பார்க்கிறேன்” என சொன்னவள் தனது இடத்திற்கு வந்து தேவையான அனைத்து டாக்குமெண்ட் நிறைந்த ஃபைல்களை தன் கைகளில் சுமந்துக் கொண்டு பக்கவாட்டில் இருந்த படி வழியாக மாடிக்குச் சென்றாள். அங்கு வரிசையாக அறைகள் இருந்தாலும் கடைசியாக விசாலமான அறை ஒன்று இருந்தது அதன் கதவை திறக்க உள்ளிருந்த அனைவரும் அவளை என்னவென பார்த்தார்கள்
”சாரி சாரி” என சொல்லிக் கொண்டே பரந்தாமனிடம் வந்து நின்றாள்
”பூங்கொடி இவங்கள்லாம் நம்ம பார்ட்னர்ஸ், வழக்கம் போல கணக்குவழக்குகளை பார்க்க