”சாரி பூங்கொடி வா வண்டியில ஏறிக்க“ என அழைக்க அவளும் வண்டியில் ஏறிக் கொண்டாள். அதோடு ஈஸ்வரனுக்கு பெரிய பாரத்தை இறக்கிவிட்டது போல நிம்மதி வர அவன்
”சேது நான் கிளம்பறேன்” என சொல்ல
”இருடா சேர்ந்து போகலாம் என்ன அவசரம்” என சொல்ல அதில் அவனும் சரியென தலையாட்ட இரு வண்டிகளும் ஒன்றாக பயணப்பட்டது
”அண்ணா அவன் எதுக்கு கூட வரனும், போக சொல்லுங்க“
”ப்ச் வரட்டுமே நீ இப்படி நடந்து வர்றேன்னு பார்த்துட்டு வந்து என்கிட்ட போன்ல சொல்லி வரவழைச்சான் தெரியுமா நீ பஸ்ல வராம ஏன் நடந்துவந்த”
”பஸ் வரலை அண்ணா அதான்”
”அப்படியா சரி பரவாயில்லை” என சொல்ல அவளோ ஈஸ்வரனை பார்த்தாள், அவனது முகம் கடுகடுவென இருந்தது. அதைக்கண்டு அவனை வம்புக்கு இழுக்க எண்ணி
”அண்ணா உனக்கு ஒரு விசயம் தெரியுமா” என சத்தமாக பேச ஈஸ்வரன் அதிர்ந்தான் சேதுவோ
”என்ன விசயம்மா”
”காலையில மூர்த்தி மாமாவை பார்த்தேன் அண்ணா“
”அப்படியா”
”ஆமாம் அவர் ஒரு விசயம் சொன்னாரு அண்ணா அதை சொன்னா நீ நம்பவே மாட்ட”