இரக்கப்பட்டு நான் காப்பாத்தினா என் மேல இரக்கப்படாம எப்படி போறான் பாரு எனக்கு மட்டும் இப்ப ஏதாவது ஆச்சின்னா அதுக்கு முழு காரணமும் அவனாதான் இருக்கும்” என புலம்பிக் கொண்டே நடந்தே சென்றாள்.
தெருமுனை வந்து வலது பக்கம் திரும்பி நடக்க அங்கு வண்டியுடன் காத்திருந்தான் ஈஸ்வரன் அவளுக்கோ கால் வலி பசிவேறு ராகவனால் ஏற்பட்ட மன உளைச்சல் இதற்கு மேல் தன்னால் நடக்க இயலாது எனபுரிந்துக் கொண்டு அவனைப் பார்க்க அவனோ அவளையே பாவமாக பார்த்தான் விட்டால் அவளது காலிலே விழுந்துவிடுவான் போல அப்படி பார்த்து வைக்க அவளோ வீம்புக்கென்று அவனை கடந்து மெதுவாக செல்ல அவன் கடுப்பானான் சட்டென அவளின் கையை பிடித்து இழுக்க அவளோ அய்யோ என அலற அதில் பயந்து அவளது கையை விட்டுவிட அவளோ
”டேய் பொறுக்கி உனக்கு எவ்ளோ திமிரு இருந்தா என் கையை பிடிப்ப உன்னை” என சொல்லிக் கொண்டே காலில் இருந்த செருப்பை கழட்ட போக அதைக்கண்டு மிரண்ட ஈஸ்வரனோ வண்டியை ஓட்டிக் கொண்டு பறந்தான்.
அவன் சென்றதும் அவளுக்கு ஆயாசமே வந்தது
”போயிட்டானா சே செருப்பு கடிக்குது அதை சரியாக்கலாம்னு பார்த்தா அதை தப்பா புரிஞ்சிக்கிட்டு போயிட்டான் பாரு இவன் இப்படியிருந்தா எப்படி பொழைப்பானோ போ” என புலம்பிக் கொண்டே ஒரு பத்து அடி நடந்து அதற்கு மேல் நடக்க முடியாமல் நின்றே விட்டாள். அதே சமயம் புல்லட் சத்தம் கேட்டது
”இன்னிக்கு இவன் ஓய மாட்டான் போல இருக்கே” என புலம்பிக் கொண்டே பார்த்தாள் ஈஸ்வரன்தான் வந்திருந்தான் இன்று அவள் அடித்தாலும் திட்டினாலும் சரி அவளை பத்திரமாக அவளது வீட்டில் இறக்கிவிட்டே ஆக வேண்டும் என்ற முடிவுடன் வந்தான். அவளுக்கோ பயம் ஏற்கனவே இரண்டு வீடும் பிரிந்துகிடக்கறது, இப்போது அவனுடன் வண்டியில் போனால் ஊர் தப்பாக பேசும் மீண்டும் இரண்டு வீட்டுக்கும் பிரச்சனை வெடிக்கும், ஏற்கனவே இருக்கும் விரிசல் இன்னும் பெரிதாகிவிடுமே என்ற அச்சத்தில் அவள் இருந்தாள் அவனுக்கோ அவளின் பாதுகாப்பு மட்டுமே தெரிந்தது வண்டியுடன் அவளிடம் வந்து நின்றான் அவளோ முகத்தை திருப்பினாள் அதில் கோபம் கொண்டவன்