”அய்யோ பஸ் போகுதே இப்ப என்ன செய்றது பரவாயில்லை அடுத்த ஸ்டாப்பிங்க்ல இறங்கிடலாம்” என நினைத்து பயணப்பட்டாள்.
அவளின் செயலை நினைத்து குழம்பிய ஈஸ்வரனோ அந்த பஸ் பின்னாலேயே வண்டியை ஓட்டிக் கொண்டு சென்றான்.
ஒரு ஸ்டாப்பிங்கில் பஸ் நின்றதும் பூங்கொடி இறங்கி நின்றாள். பஸ் சென்றது ஈஸ்வரனோ அவளை விட்டு 10 அடி தொலைவில் வண்டியை நிப்பாட்டிவிட்டு அவளை குழப்பமாக பார்க்க அவளோ அவனை பார்த்தாள்
”ப்ச் அட ராமா இங்கயும் வந்துட்டானா சே கொடுமை கொடுமைன்னு கோயிலுக்கு போனா அங்க ஒரு கொடுமை தலைமேல ஏறி ஆடுச்சாம் அப்படியிருக்கு என் நிலைமை” என அவனுக்கே கேட்கும்படி புலம்ப அவன் அதை சட்டை செய்யாமல் அவளிடம் வண்டியை ஓட்டியபடி வந்து நின்றான்.
”இவன் வண்டியில ஏர்றதுக்கு நடந்தே போகலாம்” என சொல்லிக் கொண்டே நடக்கலானாள். ஈஸ்வரனோ வண்டியை மெதுவாக ஓட்டிக் கொண்டே அவளை பின்தொடர்ந்தான் அதைக்கண்டவள்
”வர்றான் பாரு பின்னாடியே இவனுக்கெல்லாம் வேற வேலையில்லை போல இருக்கு பொண்ணுங்களை பார்த்தா போதும் உடனே வழிஞ்சிக்கிட்டு வந்துடுவானே சே இவன்கிட்டயிருந்து எப்படிதான் தப்பிக்கறதோ என்னை காப்பாத்த யாருமில்லயா ஆண்டவா” என வேண்டிக் கொள்ள அதைக்கேட்டு கோபப்பட்டு ஈஸ்வரன் சட்டென வண்டியை ஓட்டிக் கொண்டு சென்றுவிட அவன் சென்றதும் அவன் மீதே கோபம் கொண்டாள்
”பாவி பாவி போறான் பாரு என்னை பத்தி கொஞ்சமாச்சும் அவனுக்கு அக்கறையிருக்கா, என்னடா இந்த ராத்திரி நேரத்தில தனியா நடந்துப் போறாளே அவளுக்கு ஏதாவது பிரச்சனை வருமே அதை பத்தியெல்லாம் கொஞ்சம் கூட நினைக்காம போய்கிட்டே இருக்கான் சே இவனுக்காக போய் அவன் அப்பாகிட்ட பரிஞ்சி பேசினது என் தப்பு நடக்கறது நடக்கட்டும்னு அப்படியே விட்டிருக்கனும் அப்போ அவன் வீட்ல பெரிசா சண்டை வந்திருக்கும் இவன் மேல