மறுபக்கம் மூர்த்தி புல்லட்டுடன் ஈஸ்வரனது துணிக்கடைக்கு வந்தார்
”என்னப்பா சீக்கிரமா வந்துட்டீங்க போன வேலை முடிஞ்சதா”
”நான் போகலையே, நேரா புல்லட்டோட இங்க வந்துட்டேன்”
”ஏன்பா”
”ஒண்ணுமில்லை உங்கம்மா நச்சரிப்பு தாங்காம உன் ஜாதகத்தை கொண்டு போய் நாலஞ்சு ஜோசியரை பார்த்து பேசலாம்னு உன்கிட்ட வண்டியை வாங்கிக்கிட்டு கிளம்பினேன்“
”ஏன்பா இப்படி நீங்களும் அந்த சாமியார் சொன்னதை நம்பலாமா உங்க பையன் மேல சந்தேகப்படலாமா“
”அட இல்லை ஈஸ்வரா சந்தேகம்லாம் இல்லை ஒரே குழப்பமா இருந்தது அதை தீர்த்துக்கலாம்னு கிளம்பினேன்”
”அப்புறம் ஏன் வந்துட்டீங்க”
”வழியில பூங்கொடியை பார்த்தேன் பாவம் அவள் நடந்து போய்கிடடு இருந்தா“
”ஏன் வண்டிகென்ன ரிப்பேரா”
”அதெல்லாம் இல்லை நீ அவள் அண்ணனுக்கு செய்து வைச்சியே ஒரு காதல் கல்யாணம்”
”அப்பா இப்ப எதுக்கு அதெல்லாம் நானே மறக்கனும்னு நினைக்கற விசயத்தை ஞாபகப்படுத்தாதீங்க“
”ஞாபகப்படுத்தலை இன்னிக்கு சேதுவுக்கு கல்யாண நாளாம், அவங்க கோயிலு சினிமான்னு போறதுக்காக வண்டி வாங்கிட்டு போயிட்டாங்களாம், இவள் தனியா நடந்து வந்துக்கிட்டு