”இல்லை சத்தியமா இதை பத்தி எனக்கு தெரியாது, அண்ணி என்கிட்ட எதுவும் சொல்லலை”
”ஓ இப்படி சொல்லி அந்த பணத்தை தராம ஏமாத்தலாம்னு நினைப்பா”
”சே அப்படியெல்லாம் இல்லை தவணை தொகை எவ்ளோன்னு சொல்லுங்க”
”ம் பார்ப்பா ரோஷத்தை ம் மாசாமாசம் பத்தாயிரம் ரூபாய் தரனும் உன்கிட்ட பணம் இருக்காதே” என கிண்டலாக சொல்ல அவளோ அதிர்ந்தாள்
”என் சம்பளத்தை கழிச்சிக்குங்க சார்”
”ப்ச் நீ வாங்கறதே குறைவான சம்பளம், இதுல அதுலயும் பத்தாயிரம் ரூபாயை கழிச்சிட்டா வீட்டு செலவுக்கு என்ன செய்வ“
”என்னவோ செய்துட்டு போறேன் உங்களுக்கென்ன உங்க பணம் வருதுல்ல, அதைப் பாருங்க சார்” என எரிந்துவிழ அவனோ
”பூங்கொடி எதுக்கு கோபப்படற, இப்படி நீ கஷ்டப்படறதை பார்க்க எனக்கு மனசு கேட்கலை, உனக்காக எத்தனை லட்சம் வேணா செலவு செய்யலாம், அந்தளவுக்கு நீ ஒர்த்தான பீஸ் தெரியுமா” என சொல்ல அவளுக்கு அந்த வார்த்தைகள் கேட்டதும் உடல் கூசிப் போய் தன் இருகையால் தன் காதை பொத்திக் கொண்டாள், அவளின் அந்தச் செயல் அவனை வெகுவாக கவர்ந்தது
”இதுதான் உன்கிட்ட எனக்கு பிடிச்ச விசயம் அநியாயத்துக்கு நல்லவளா இருக்க, கெட்டதா ஒரு சொல் சொன்னாகூட அதை உன்னால கேட்க முடியலை, இந்தளவுக்கு மென்மையான பொண்ணை இதுவரைக்கும் நான் பார்த்ததில்லை” என பேச அவளின் கண்கள் கலங்கிவிட்டது.
தன் அண்ணியை நினைத்து உள்ளுக்குள் கடிந்துக் கொண்டாள். அவளின் தவிப்பை கண்டு மகிழ்ந்தான் ராகவன்.