தொடர்கதை - பெண்ணென்னும் பொன்னழகே - 15 - சசிரேகா
கருணாவுக்கும் சத்தியாவுக்கும் பூங்கொடியின் நினைவில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வருவதற்குள்ளேயே அவர்களுக்கு 3 மாதங்கள் பிடித்துவிட்டது, இந்த 3 மாதத்தில் பூங்கொடி அந்த வீட்டில் ஒரு அங்கமாகவே மாறிவிட்டாள், வெளிப்பார்வைக்கு ஈஸ்வரன் அவளை திட்டுவதும் விரட்டுவதுமாக இருந்தாலும், இரவு நேரம் அவளுடன் சந்தோஷமாக ரொமான்சில் பட்டையை கிளப்பிக் கொண்டிருந்தான், பூங்கொடிக்கும் பல நாள் கவலைகள் தீர்ந்து மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்திக் கொண்டிருந்தாள், சுலோச்சனாவுக்கு எப்போது தன் 2 மகன்களும் திருமண பேச்சு எடுப்பார்கள் என ஒவ்வொரு கோயில் குளமாக சுற்றிக் கொண்டிருந்தார். மூர்த்திக்கு வீட்டில் நடப்பதை வேடிக்கை பார்
...
This story is now available on Chillzee KiMo.
...
விதமாக எடுத்துச் சொல்வான், எப்படியாவது தாயையும் மகளையும் இணைக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் செயல்பட்டான் ஆனால் அவனது முயற்சி தொடர்ந்து தோல்வியை மட்டுமே சந்தித்தது ஆனாலும் அவன் தனது முயற்சியை விடவில்லை
சத்தியாவும் கூட ஜெயசீலனிடம் அவ்வப்போது பூங்கொடி ஈஸ்வரன் பற்றி பேசி அவரது கோபத்தை மாற்ற முயற்சிப்பான், அதுவும் பலனிக்காது ஆனாலும் அவரை விடமாட்டான்.