"..........................."
" அப்படிங்குற ? சுபா கிட்ட சொல்லிடவா ? "
" ....................................."
" எல்லாருமா?"
"....................."
" அப்போதான் உனக்கு ஜாலியா இருக்குமா ? என் நேரம் . சரி அப்போ இவினிங் உன்னை பிக் அப் பண்ணும்போது, நீ நான் சுபா எல்லாரும் காபி ஷாப் ல பேசி பக்காவா பிளான் போட்டுடு அப்பறமா வீட்டுக்கு போகலாம் . "
"........................................"
" இல்லடா நோ வோரிஸ்..... நான் ஆல்ரெடி சஞ்சய் கிட்ட சொல்லி மீராவுக்கு இன்னைக்கு நிறைய வொர்க் கொடுத்து லேட்டா வீட்டுக்கு வர்ற மாதிரி ப்ளான் போட்டுட்டேன்"
" ................................"
" எல்லாம் உன்னோட ட்ரைனிங் தான் . ஒகே டா ...யா ....பை பை "
தன் திட்டம்படி எல்லாம் நடக்க வேண்டும் என்று இறைவனை வேண்டிகொண்டான் கிருஷ்ணன். அந்த நேரம் பார்த்து வானொலியில், அண்மையில் அவன் மிகவும் ரசித்து கேட்ட பாடல் ஒலிக்க , மனதில் மீரா அவனை பார்த்து பாடுவதைபோல கற்பனை செய்துகொண்டே புன்னகையுடன் கண் மூடி அமர்ந்திருந்தான் கிருஷ்ணன்.
காத்திருந்தாய் அன்பே
எந்தன் காதல் நீதானே...
ஓர் லட்சம் விண்மீன் மழையாய் பொழிகிறதே
காத்திருந்தாய் அன்பே
எந்தன் காதல் நீதானே...
ஓர் லட்சம் விண்மீன் மழையாய் பொழிகிறதே
உன் விழியால் அன்பே
என்னை உருகச் செய்தாயே
என் சீனி கண்ணீர் உன்மேல் விழுகிறதே
கடலோடு சேரும் வான் மழைத்தூளி போல்
உன் கண்ணோடு மணியாக கலந்திருப்பேன்
உடலோடு ஒட்டிச் செல்லும் நிழல்களை போல்
நான் உன்னோடு பின்னோடு தொடர்ந்திருப்பேன்
உன்னாலே நெஞ்சில் அடி பூகம்பம்
பூக்களை திறக்குது காற்று
புலங்களை திறக்குது காதல்
முடிந்தது மறைந்தது ஊடல்
காதல் செய்வோம்
ஒருமுறை மலர்வது காதல்
இருவரும் கலந்தபின் தேடல்
முதல் எது முடிவது காதல்
காதல் செய்வோம்
காத்திருந்தாய் அன்பே
நான் பூத்திருந்தேன் முன்பே
காத்திருந்தாய் அன்பே
நான் பூத்திருந்தேன் முன்பே
காத்திருந்தாய் அன்பே
எந்தன் காதல் நீதானே
ஓர் லட்சம் விண்மீன் மழையாய் பொழிகிறதே
அன்பே அன்பே
நீ சொல்லிய மெல்லிய சொல்லிய
என் தலை சொர்க்கதை முட்டுதடி
நீ சம்மதம் சொல்லிய நொடியில்
ஆண்புகழ் மொத்தமும் அழியுதடி
என் ஆவலை வாழ வைத்தாய்
என் ஆயுளின் நாட்களை நீள வைத்தாய்
நீள வைத்தாய்
என் பூமியை எடுத்துக் கொண்டாய்
உன் புன்னகை தேசத்தை பரிசளித்தாய்
காதலனே உன்னை துடிக்கவிட்டேன்
கண்களை வாங்கி கொண்டு
உறங்கவிட்டேன் என் உயிரே
உன் அன்பு மெய் என்று உணர்ந்துவிட்டேன்
அடி பெண்ணே உன் வழி எல்லாம் நான் இருந்தேன்
இனி நீ போகின்ற வழியாக நான் இருப்பேன்
சம்மதித்தேன் உன்னில் சங்கமித்தேன்
உன்னால நெஞ்சில் அடி பூகம்பம்
என் செங்குயிலே சிறு வெயிலே சிற்றழகே ஐ லவ் யூ
ஹே பொர்பதமே அற்புதமே சொர்பனமே ஐ லவ் யூ
காத்திருந்தாய் அன்பே ....
( நம்ம மீரா கிருஷ்ணாவின் காதல் ஏதோ மர்மமா போக அதே காலை நேரம் நம்ம ரகுராம் அவர் அப்பா முன்னாடி திரு திருன்னு முழிச்சுகிட்டு இருந்தாரு. சரி இவருதான் அப்படின்னா அவரோட ஆசை நாயகி சாரி ஆசை ஜானகி அவங்க அத்தை பானுவின் முன் குட்டி போட்ட பூனை மாதிரி நடந்துட்டு இருந்தார். நம்ம மது டார்லிங் ரொம்பே வருத்தபட்டதுனாலே இன்னைக்கு இவங்க சீன் ல ஒரு டர்னிங் பாயிண்ட் வெச்சிடுவோமா ... வாங்க ரகு அவங்க அப்பாகிட்ட திட்டு வாங்குறதை ஓட்டுகேப்போம் ...ஹீ ஹீ )
" ரகு, சுஜாதா கிட்ட உனக்கு என்ன கோபம் ? "
" ப்ப்ப்ச்ச்ச்.... அப்பா எனக்கு அவங்க மேல என்ன கோவம் "
" டேய் அதைத்தாண்டா நானும் கேக்குறேன் "