"எதுவும் வேணாம்!"
"கேளுடா!"-அவன் யோசித்துவிட்டு,
"ஆங்கிரி பேர்ட்ஸ்!"
"அம்மாடி!பயங்கர கோபக்காரர் தான்!"-இவ்வாறு ஆதித்யா தீக்ஷாவிற்கும்,ரவி ராகுலிற்கும் தேவைகளை பூர்த்தி செய்தனர்.
வீட்டிற்கு வந்ததும் சரண் மதுவிடம் இதுக்குறித்து கூறி சிரிக்க,கோபத்தோடு அமர்ந்திருந்தவனின் கன்னத்தில் முத்தமிட்டு,
"கோபப்படாதே கண்ணா!அந்தப் பொண்ணு பேர் என்ன?"
"சதி!"
"என்னது?"
"அந்தப்பொண்ணு சதி பண்ணி என் பொம்மையை வாங்கிட்டா!இனி அவளை பார்த்தா சதின்னு கூப்பிட்டு இம்சை பண்ண போறேன்!"-மது சிரித்துவிட்டாள்.
அதன்பிறகு பலமுறை இருவரும் சந்திக்க நேர்ந்தது.அவளை காணும் போதெல்லாம் சதி என்றே அழைத்து,இறுதியில் அதுவே அவள் செல்ல பெயராய் மாறியது.
அதன்பிறகு அவர்கள் பழக்கத்தில் அவர்களின் பகை அழிந்தது.
நீண்ட இடைவேளைக்கு பின் அவள் தீக்ஷாவாய் வர அவளை அடையாளம் தெரியவில்லை அவனுக்கு!!இதுதான் கதை!!!
அவள் என் சதியா?ஆனந்தத்தில் துள்ளியது அவன் மனம்!!
ரவிக்குமார் கூறித்து கூறியிருந்தாலும் தெரிந்திருப்பான் அவள் தான் வாயையே திறவவில்லையே!!!
மீண்டும் திரைச்சீலையை விலக்கி பார்த்தான்.அவள் எழில் முகம் புன்னகையால் மலர்ந்திருப்பது அவனுள் பரவசத்தை வெளிகொணர்ந்தது.
அவளும் என் நிலையில் தான் இருப்பாள் என்று கூறிக்கொண்டது மனம்!!!
அவன் நிச்சயம் அறிந்திருக்க மாட்டான்!!அவன் மனம் தன் சதியிடத்தில் சரணடைந்துக் கொண்டிருக்கிறது என்று!!!
தொடரும்
{kunena_discuss:877}