(Reading time: 77 - 154 minutes)

ங்க கூட வசிஸ்குள்ள வர்ற வரைக்கும், ஏன் சங்கீத் சாகுற வரைக்கும் கூட சூர்யாக்கு இப்டி எந்த ப்ளானும் இல்லை. அவன் உங்களுக்கு ஃபேவராத்தான் இருந்திருக்கான். பட் அந்த டாகுமென்ட்ஸைப் பார்த்ததும், அதை கண்டு நீங்க எல்லோரும் பேனிக் ஆனதும் அவன் மூளை வேற மாதிரி வேலைப் பார்த்துட்டு.

ஏன்னா யாருக்காக, யாரை மிரட்டி எந்த கம்பெனியை எழுதி வாங்க என்ற எதுவும் சொல்லாமல் தன்னையும் காமிச்சுக்காம முன்பு சங்கீத் லீகல் சைட் அட்வைஸ் வாங்கி இருந்ததே அந்த சூர்யாட்டதான்…. அனனியாஸ்னு இல்லவே இல்லாத ஒரு ஆள் இருக்ற மாதிரி ஃபேக் ஐடன்டி உருவாக்க தேவையான எல்லாம் செய்து கொடுத்ருந்ததும் சூர்யா தான்.

சூர்யா அப்ப ஜெனிஷாவை விரும்பிட்டு இருந்திருக்கான். ஜெனிஷா அப்பாவுக்கும் மெடிகல் கம்பெனி தான், அவரோட போட்டி கம்பெனி வசிஸ், வசிஸை காலி செய்து கொடுத்தா, அதை வச்சே ஜெனிஷா அப்பாவை இம்ப்ரெஸ் செய்து கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்கலாம்…அதோட அவங்க அப்பா கம்பெனி இதனால அடையப் போற லாபம் எல்லாம் ஒரே பொண்ணான ஜெனிஷாவுக்கு தானேன்னு ப்ளான் செய்துட்டான் அவன்.

அந்த டாகுமென்ட்ஸ் கம்பைல் செய்திருந்த விதம்  லா தெரியாதவங்க பார்த்தா மிரள்ற மாதிரி விஷயம் தான். ஆனா கொஞ்சம் விஷயம் தெரிஞ்சா கூட அதை வச்சு ஒன்னுமே செய்ய முடியாதுன்னு தெரிஞ்சிருக்கும்.

உதாரணமா உங்க அண்ணா கம்பெனி ஷிப்பிங் பத்தி இருந்தது எல்லாம் உண்மையான டாகுமென்ட் தான்….அனா அதை ராஜ்குமார் அங்கிள் பார்த்திருந்தாங்கன்னா புரிஞ்சிருந்திருப்பாங்க…

எல்லாம் போர்ட் அத்தாரிட்டி லீகல்னு க்ளியர் செய்த ஃப்ரைட்ஸ் தான்… அதுக்குள்ள எந்த ட்ரக்ஸோ வேற எதுவோ இருந்துச்சுன்னு எப்ப ப்ரூவானாலும் அது அனுப்புனவங்களையும் ரிசீவ் செய்தவங்களையும் தான் அக்கவ்ண்டபிளா கோல்ட் செய்யுமே தவிர ட்ரான்ஸ்போர்ட் செய்தவங்கள இல்ல…ஏன்னா அவங்க லீகலா அதை செக் பண்ணி கவர்மென்ட்ட இருந்து க்ளியரன்ஸ் வாங்கி இருக்காங்க…

அப்டிதான் மத்த எவிடென்ஸ் கதையும்….அந்த மார்சுவரி ஃபோட்டோ….எந்த ஒரு ஃபோட்டோவும் கோர்ட்ல தனி எவிடென்ஸா நிக்காது…அதுக்கு சப்போர்டிவ் காரணம் வேணும்…அதை உண்மையான காரணம் சொல்லியே கோர்ட்ல நாம ஆர்க்யூ செய்யலாமே….இப்டி ஒன்னொன்னும்….மொத்தத்துல மிரட்டறதுக்காக தான் அந்த டாகுமென்ட்ஸ் யூசாகுமே தவிர கோர்ட்லலாம் அது ஸ்டாண்ட் செய்யாது. அது சூர்யாவுக்கு நல்லாவே தெரியும். உங்களுக்கு தெரியலை….

அதோட வசிஸை எங்கப்பா பேர்ல மாத்தி திரும்ப தான் பேர்ல சூர்யா மாத்த சொன்னதும் இதே ஐடியா பேஸ்ல தான்…

சங்கீத் உண்மையில் வேற ஒரு கேங்க்ட்ட இருந்து ட்ரக்கை வாங்கி அவங்க கேட்ட நாட்டுக்கு கடத்தி கொடுத்றுக்கான கமிஷன்காக, மத்தபடி அவன் குறி வசிஸ்….வசிஸ்குள்ள அவன் எந்த இல்லீகல் டரக் ப்ரொடக்ஷனும் செய்யவே இல்லை….

வசிஸ்ல ட்ரெக் ப்ரொடக்ஷன் நடந்த மாதிரி இருக்ற எல்லாம் வசிகரனை மிரட்ட ஏற்பாடு செய்த ஃபேக்….ஐடியா கர்டசி சூர்யா தான். ஆனால் சூர்யாவிற்கே இதை வசிஸ்க்கு எதிராக செய்யத்தான் சங்கீத் கேட்டிருக்கிறான் என அப்ப வரை தெரியாது.

சோ சங்கீத் உங்களை மிரட்ட வச்சிருந்த டாகுமென்ட்ஸை வைத்து சூர்யா உங்கள பயம்காட்டி ஊரவிட்டு துரத்தி வசிஸையும் மூட வச்சுட்டான்…..அவனப் பொறுத்தவரைக்கும் இது எதுவும் தப்பே இல்லை….வசிகரனை தன் கம்பெனில 30% அதிக்கு ஷேர் குடுக்கனும்…அப்பதான் என் ஹெல்ப் உங்களுக்குன்னு சொல்லி ஷேர் குடுக்க வச்சுருக்கான்….அதோட வசிஸின் எந்த காசையும் அவன் எடுக்கலை….

அவங்களும் நல்லா இருக்காங்க நானும் நல்லா இருக்கேன்…இதுல என்ன தப்புன்னுதான் இப்ப வரைக்கும் கேட்டுட்டு இருக்கான்….

அவனுக்கு யார் கூட மேரேஜ் ஆகிருக்குதுன்னு உங்களுக்கு தெரிஞ்சா ஒரு வேளை உங்களுக்கு சந்தேகம் வந்துடலாம்னு….தனக்கு கல்யாணம் ஆன விஷயத்தை அவன் உங்கட்ட சொல்லவே இல்லை…..உங்க கூட லிங்க்ல இருந்தா ப்ரச்சனைனு சொல்லி மத்த ஃப்ரெண்ட்ஸ் உங்க கூட கான்டாக்ல இருக்காத மாதிரி செய்துட்டான்…ஆக இந்தியாவில இருந்து அவன் உங்களுக்கு சொல்றதுதான் இன்ஃபோன்ற மாதிரி மெய்ன்ட்டன் செய்துட்டான்….

உங்களுக்கும் அவன சந்தேகப் பட அவசியமே இல்லை…அதான் இவ்ளவு வருஷம் ஏமாத்திட்டான்…”

சொன்ன ஆதிக்கைப் பார்த்துக் கேட்டான் அதி…

”நீங்க எப்டி மாப்ள சூர்யான்னு கண்டு பிடிச்சீங்க?”

“அது நீங்க பேசுறப்ப எவிடென்ஸை பத்தி சொன்னதும் தெரிஞ்சிட்டு…ஒரு லாயர் இந்த எவிடென்ஸை பார்த்து பயந்தாரான்னு…அப்பவே புரிஞ்சிட்டு......அடுத்து அவன் ரிச் பேக்ரவ்ண்ட் உள்ள எங்கப்பாவையும்…உங்க அப்பாவையும் வாயடைக்க வைக்க ட்ராமா ஆடிருக்கான்….பட் பியூலா அத்தை வீடைப் பத்தி கண்டுக்கவே இல்லை… அதாவது அவனுக்கு பணத்து மேல அவ்ளவு மரியாதை…..ஆனால் செய்த எந்த ஃபேவருக்கும் உங்கட்ட அவன் பணமே வாங்கலை…தட் டூ ஃபார் இயர்ஸ்….அப்டின்னா அவனுக்கு வேற எதோ பெனிஃபிட் இருந்திருக்கனும் இந்த டீல்ல….இன்னொரு விஷயம் சங்கீத்க்கு குடும்பம்னு எதுவும் கிடையாதுன்னு சொன்னதும் அவனை யாரும் சீரியஃஸா தேட மாட்டாங்கன்னு மேல் பார்வைக்கு அவன் அப்ராட் போய்ட்ட மாதிரி செட் செய்த சூர்யா, யாருன்னே தெரியாத அனனியாஸ் உங்களை துரத்துவான்னு இப்ப வரைக்கும் சொல்லிகிட்டு இருந்தது….இப்டி நிறைய க்ளூ….….”

“இப்ப அடுத்து என்ன மாப்ள….?”

“பயப்படுறதுக்கு ஒன்னுமில்ல அங்கிள்…கேஃஸ் நடக்கும்……செல்ஃப் டிஃபன்ஸ்ல அன் இன்டன்ஷனல் மர்டர்ன்னு ப்ரூஃப் பண்ணிடலாம்…..உங்க மத்த ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்களே… அவங்க விட்னெஸ் செய்ய ரெடியாதான் இருக்காங்க….ஆனாலும் தப்பிச்சு ஓடி வேற நாட்டு சிட்டிசன் வாங்கினது…இதெல்லாம் தப்புன்னு தான் ஜட்ஜ்மென்ட் வரும்…பட் பெருசா இருக்காது…டியூ டூ உங்க சிச்சுவேஷன் ஏஜ்…பார்போம்…..இப்போதைக்கு ஆன்டிசிபேட்டரி பெய்ல் இருக்றதால உங்களுக்கு ஒன்னும் ப்ரச்ச்னை இல்ல…”

“எனக்கு உங்களுக்கு எப்டி நன்றி சொல்லனே தெரியலை மாப்ள…”

“இதுல என்ன இருக்குது அங்கிள்…எனக்கு மட்டுமில, வந்தனா மேம்க்கும் இதுல பெரிய பங்கு இருக்குது….இத்தன வருஷமா உங்களுக்கு நியாயம் கிடைக்கனும்னு போராடுன ஒரு ஆள் அவங்க…”

“கண்டிப்பா மாப்ள…..ஆனா என்ட்ட இவ்ளவு நல்லா நடந்துக்கிற நீங்க உங்க வசி மாமாட்ட இன்னும் கோபமா இருக்கிற மாதிரிதான் இருக்குது…..என்னை மாதிரியே தான அவரும்….விக்டிம் ஆஃப் சிட்டுவேஷன்ஸ்….மன்னிச்சிடலாமில்லையா?”

 அதி இப்பொழுதுவரை ஆதிக் வசிகரனை பேச்சுக்கு கூட மாமா என சொல்லாததைக் கவனித்துக் கேட்டான்.

“உங்க வசிகரன் சார்ட்ட மட்டுமில்ல உங்க மேலயும் எனக்கு ஒரு வருத்தம் இருக்குது அங்கிள்….நான் ரேயுவ அடிச்சது தாங்க முடியாம  அவ மேல உள்ள பாசத்துல எங்களை நீங்க மீட் செய்ய ட்ரை பண்ணுவீங்கன்னு நான் எதிர்பார்த்தப்ப கூட….எங்க சேஃப்டிய அப்டியே உங்களை நம்பி நான் விட்டுடலை……நீங்க என்னதான் எங்க மேல பாசமா இருக்கீங்கன்னு தோணினாலும்…யார்ட்டயும் நம்மள முழுசா சரண்டர் செய்ய கூடாதுன்றது என் நம்பிக்கை….அதுவும் ரேயுவைலாம் அப்டி விட என்னால முடியவே முடியாது..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.