(Reading time: 77 - 154 minutes)

னக்கு ரெண்டு விஷயம் வேணும்….ஒன்னு நான்  சொல்ற வரைக்கும் நமக்கு இடையில உள்ள எந்த கம்யூனிகேஷன் டீடெய்ல்ஸும்……எதுவும்…உங்க வசிகரன் சாரை ரீச் செய்ய கூடாது….……அடுத்து நான் கல்ப்ரிட்டை அரெஸ்ட் செய்றப்ப எந்த அப்ஜக்ஷனும் உங்க பக்கம் இருந்து வரக் கூடாது…. “

“வாட்…???? “என முதலில் அதிர்ச்சியை வெளியிட்ட அதி….

“வசீகரன் சாரையா சந்தேகப் படுறீங்க……”

என ஆரம்பித்தவன்

“அந்த அனனியாஸ் இருக்ற இடம் உங்களுக்கு தெரியுமா? ஆனா நான் ஏன் அப்ஜெக்ட் செய்யப் போறேன்…..?” என  குழப்பத்தோடு கேட்டான்.

“அரெஸ்ட் செய்த பிறகு சொல்றேன் அங்கிள்….இப்ப .என்னையும் ரேயுவையும்  வந்த மாதிரியே திரும்ப கூட்டிட்டுப் போய் விட்டுடுங்க….”

“கண்டிப்பா மாப்ள….” ஆதிக்கின் நோக்கம் புரியவில்லை எனினும் ஒத்துக் கொண்டான் அதி

“அப்றம் இன்னொரு விஷயம் உங்க லாயர் சூர்யாவுக்கான ரெகுலர் பேமெண்டை அனுப்பிட்டே இருங்க…பட் அவர்ட்ட கூட எந்த இன்ஃபோவும் இப்போதைக்கு ஷேர் செய்யாதீங்க….”.

“ஐயோ என்ன மாப்ள இது…?அவன் செய்றது எல்லாம் ஃப்ரெண்ட்ஷிப்ன்ற பேஸ்ல…ஒரு பைசா வாங்கினது கிடையாது இதுவர….. வசிகரன் சாரோட மொத்த பணத்தையும் வாங்கி உங்கப்பாட்ட கொடுத்து கம்பெனியை எழுதி வாங்கினான்…இத்தனைக்கும் நாங்க யாரும் அங்க கிடையாது….இந்தியா உள்ள வரவும் முடியாது….அப்ப அவன் எங்களை ஏமாத்த நினச்சிருந்தா யாராலும் ஒன்னும் செய்திருக்க முடியாது…. ஆனாலும் பெர்ஃபெக்டா செய்து கொடுத்தான்…அப்ப வசிகரன் சார் அவனுக்கு எதாவது பேமண்ட் கொடுக்கனும்னு ட்ரை செய்தார்…அவன் என்ட்ட புலம்பிட்டான்….உங்கட்ட காசுக்கு வேலை செய்றவன் மாதிரியா என்னைப் பார்த்தா தெரியுது…இப்டி கேட்டுட்டாரேன்னு….அவன் அப்டித்தான்….அவனுக்கு கல்யாணம் குடும்பம்னு எதுவும் கிடையாது…..தேவைப் பட்டவங்களுக்கு அவனாலான ஹெல்ப்பை செய்துட்டு அலைவான்….ஆனா நீங்க அவன் வழியா விஷயம் வேற யாருக்கும் போய்டும்னு நினைக்கீங்கன்னு தெரியுது…அதானால இப்போதைக்கு அவன்ட்ட எதுவும் ஷேர் செய்துக்கலை ஓகேவா…?”

“ புரிஞ்சிகிட்டதுக்கு தேங்க்ஸ் அங்கிள்..”

டுத்து கொண்டு செல்லப் பட்ட படியே ஆதிக்கும் ரேயாவும் கன்டெய்னர், ஹெலிகாப்டர், கப்பல்,  சென்னை சிட்டி, தஞ்சாவூர் வீடு என பொழுது விடியும் முன்னர் வீடு திரும்பி வந்தனர்.

வீட்டில் நுழைந்ததும் இழுக்காத குறையாக ரேயாவைக் கூட்டிக் கொண்டு ஆதிக் சென்றது அவர்களது படுக்கை அறைக்குத்தான். கையில் வைத்திருந்த அதி தந்த அந்த ஃபைலை படுக்கையில் வீசியவன்

முதல் வேலையாக படுக்கைக்கு மேலே வெளியே தெரியும் படி இருந்த அந்த மைக்கை பிய்த்து எடுத்துக் கொண்டு போய் கிச்சனில் இருந்த டஸ்ட் பின்னில் போட்டுவிட்டு வந்தான்.

ரேயாவுக்கு ஆதிக்கின் எண்ணம் புரிகின்றது. வெட்கமும் ஆசையும் போட்டியிடும் அவள் உள்ளும்.

குளிப்பதற்கு தேவையான மாற்று உடைகளுடன் அவன் அட்டாச்ட் பாத்திற்குள் செல்ல, நகம் கடித்தபடி இவள். இப்பொழுது இவள் என்ன செய்ய வேண்டும்?

“வெளியே வந்தவன் ரேயு நீ அந்த பக்கம் படுத்துக்கோ…”

என படுக்கையின் அடுத்த பக்கத்தை காண்பித்துவிட்டு, அவன் வழக்கமாக படுக்கும் இடத்தில் அந்த ஃபைலை விரித்தான்.

ஜிவ் என நின்றிருந்தவள் சொய்ங் என ஆனாள்.

கட்டிலுக்கு பக்கத்தில் குனிந்து இரு கைகளையும் அந்த ஃபைலுக்கு இரு புறமும் ஊன்றிக் கொண்டு நின்றபடி தீவிரமாக அந்த டாகுமென்ட்ஸை ஸ்டடி செய்ய ஆரம்பித்தான் அவன்.

இப்பொழுது உர் என்ற நிலையை அடைந்தாள் பெண்.

அதையும் அவன் உணர்ந்தான் இல்லை. அவன் முகத்தைப் பார்த்தாள். என்ன செய்யவென இவளுக்குப் புரியவில்லை. ஆனால் உர் நிலை காணமல் போய் கரையத் தொடங்கியது மனம் அவன் முகம் கண்டதும்.

அப்படி என்னததான் படிக்கானாம் இவன்?

அவன் அருகில் முழங்காலிட்டு ஃபைலை எட்டிப் பார்த்தாள். எதுவும் புரியவில்லை.  அதுக்கு மனசை ஃபைல்ல வச்சு பார்த்திருக்கனுமே….

முழங்காலிட்ட நிலையிலேயே மெல்ல நகர்ந்து அவனுக்கும் கட்டிலுக்கும் இடையில் நுழைந்து அவன் கைகளுக்கு இடையிலாக தலையை நுழைத்து ஃபைலை எட்டிப் பார்த்தாள். என்ன இருக்கிறதாம் அதில்?

மனம் அதில் சென்றால் தானே

அதே நிலையில் தலையை மட்டும் திருப்பி தனக்கு மேல் தெரிந்த அவன் முகத்தைப் பார்த்தாள்.

இப்பொழுதும் அவன் கண் ஃபைலில் இருந்தாலும், அவன் இடக்கை நீண்டு இவளை இடையோடு வளைத்துக் கொண்டது.

“ஏய் குட்டிப் பொண்ணு இப்டி குறுக்க வர்றது  பேட் மேனர்ஸ்… ஆனாலும் நானும் இப்டி பெட்ல வச்சு வேலை செய்றதும் சரி இல்லை….”

“ம்…”

எதோ சொல்லி வைத்தாள். அவன் என்ன சொல்றான்னு அவளுக்கு எதாவது புரிஞ்ஜுதாமா?

“மத்த எந்த ப்ரஃபஷன்ல இருந்தாலும் கண்டிப்பா இப்டி இருந்திருக்க மாட்டேன் குட்டிமா …பட் இங்க வேற வழி இல்லை…”

“………………………” அவன் பேசியதே அவளுக்குத் தெரியாது.

“இன்னைக்குள்ள இத முடிச்சே ஆகனும்டா…”

ஃபைலின் அடுத்த பக்கத்தை அவளை பிடிக்காதிருந்த கையால் திருப்பினான்.

“ப்ரபாகர் சுரபி கூட பத்ரமா இரு…..இன்னைக்கு இன்டர்வியூக்குன்னு அட் போட்டுருக்குதுல்ல…ஆட்கள் வருவாங்க…கூட்டத்தோடு இரு…நான் சென்னை போய்ட்டு வரேன்…”

இப்பொழுது முழு சுயத்திற்கும் வந்துவிட்டாள்.

“வாட்??? இப்பதான அங்க இருந்து வந்தோம்…? அதுவும் இன்னைக்கேவா?”

“நாம  இங்க இருக்றதா அந்த கல்ப்ரிட் நம்பனும்….இங்க இருந்து நான் ஆஃபீஸ் போற மாதிரி காமிச்சுட்டு அப்டியே அங்க இருந்து திருச்சி போய் ஃப்ளைட்ல சென்னை போய்டுவேன்…..அவன் எதிர் பார்க்காத நேரத்துல தான் அவனைப் பிடிக்கனும்….டேக் கேர்”

“…………”

“கல்ப்ரிட் யார்னு தெரிஞ்சிட்டுது…பட் மோடிவ்தான் இன்னும் தெரியலை….அதுவும் டக்குனு மாட்டனும்னு ப்ரே பண்ணிக்கோ…”

அடுத்த சில மணி நேரத்தில் ஆதிக் அந்த கல்ப்ரிடை கைது செய்திருந்தான்.

மோட்டிவ் அவனது வீட்டை அடைந்த உடன் தெரிந்து விட்டது.

திக் இந்த கைது நடவடிக்கை எடுக்க தேவையான அனைத்தையும் செய்து கொடுத்திருந்தது ராஜவந்தனா டிஜிபி. தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி அத்தனை ஷார்ட் நோட்டிஸில் கேஸை ரீ ஓபன் செய்து, குற்றவாளிக்கு அரெஸ்ட் வாரண்டும் கொடுக்க வைத்து, குற்றவாளி பெய்ல் வாங்க வழி இன்றி அதை ஏற்ற வகையில் தடுத்து என எல்லாம்.

விஷயம் தெரிந்தவுடன் அதி கிளம்பி வந்துவிட்டான் குடும்பத்துடன். அண்ணன், அழுகை கண்ணீர்  ஆனந்தம் எல்லாம் முடிந்த பின்

 “எப்டி மாப்ள எப்டி ஏமாந்தோம் நாங்க ?”

என்றபடி விளக்கம் கேட்டு ஆதிக் எதிரில் வந்து அமர்ந்தான் அதி.

குற்றவாளியாய் கைது செய்யப் பட்டிருந்தது சூர்யா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.