அவள் அவரிடம் பேசிய கடைசி வார்த்தைகள் ...சரி என்று அவளிடம் சொல்லிவிட்டு வந்திருந்த போதும்...அவளை அவரால் மறக்க முடியவில்லை ...உயிரோடு கலந்திருந்த அவளின் நியாபகங்கள் தான் இறந்தால் மட்டுமே போகும் என்ற நிலையில் அவள் நினைவுடனே வாழ்ந்திட முடிவெடுத்தார்..ஆனால் ஜெயாவும் தன்னை போலவே இருப்பாள் என்று அவர் கனவிலும் நினைத்திடவில்லை தான் ...
பெண் அதுவும் அந்த காலத்தில் ..திருமணத்தை மறுத்து எத்துனை துன்பங்களை சந்தித்திருப்பாள்...அவள் மனம் எவ்வளவு புண் பட்டிருக்கும் ...
நான் அவளை நினைத்தது போல தானே அவள் என்னை ….?நான் திருமணம் முடித்து பிள்ளைகளுடன் ….? நினைக்க எத்தனை வேதனையாக இருந்து இருக்கும் ...நான் செய்த தவறு நான் அவளை விரும்பி காதலித்து ,..அதை அவளை ஏற்க சொல்லி
...
This story is now available on Chillzee KiMo.
...
னா இருக்கு நான் போய் ரெஸ்ட் எடுக்குறேன்...நடந்ததை அழகாக மறைத்து தான் கட்ட வேண்டிய கதையை கட்டிவிட்டு தனதறைக்கு சென்றான் ஆதி ..பின் தொடர்ந்தாள் மனோ .
உண்மைய சொல்லுங்க ஆதி என்னாச்சு ..?
என்ன உண்மைய சொல்லணும் அதான் சொன்னேனே ..
இல்ல நீங்க பொய் சொல்லுறீங்க எனக்கு தெரியும் ..