(Reading time: 38 - 76 minutes)

க அப்பாட்ட விஷயத்தை கண்டிப்பா சொல்லியிருப்பான் அகதன்….. ட்ராமாவின் டயலாக்‌ஸ் வரை குறிப்பிட்டு சொல்லவில்லை எனினும்…..பேசிக் ஸ்க்ரிப்ட் கண்டிப்பா சொல்லி இருப்பாங்க அப்பாட்ட…. அந்த கல்ப்ரிட்ட இருந்து இவளை காப்பாத்த இவங்க மூனு பேரும் அதாவது இவளும் சேர்ந்து ட்ராமா போடுறாங்கன்னு சொல்லி இருப்பாங்களோ…… எப்படியும் இப்ப இவளும் ட்ராமல தான இருக்கா?....இவளுக்காகவே இந்த மேரேஜ் சீக்கிரம் நடக்கனும்னாவது அப்பாட்ட கேட்றுப்பாங்க…..அதுவும் நிச்சயமா மித்ரனோட குடும்ப கதை எல்லாத்தையும் அப்பாட்ட விளக்கமாவே சொல்லி இருப்பாங்க தான்…..ஒருவேளை முதல்ல அப்பாட்ட பொண்னு கேட்கப்பவே மித்ரன் அவனோட வீட்டைப் பத்தி சொல்லி இருப்பானாய் இருக்கலாம்….இப்ப அளவு டீடெய்லா இல்லைனாலும் காண்டிப்பா பேசிக் இன்ஃபோ  சொல்லிருப்பான்….

எப்டியோ அப்பாவை கன்வின்ஸ் செய்துட்டாங்க…….அம்மாக்கு விஷயம் தெரிஞ்ச மாதிரி இல்லை….அம்மாட்ட எப்பவும் பெரிய ப்ரச்சனைனா……அவங்க இமோஷனலாயிடக் கூடாதுன்னு கொஞ்சம் பொறுமையா சிச்சுவேஷன் ஓரளவு சுமுகமான பிறகு தான் சொல்லுவாங்க….அதனால சொல்லி இருக்க மாட்டாங்க…. ஆனாலும் அம்மாவுக்கும் மித்ரன் குடும்ப கதை கண்டிப்பா தெரியும்……அப்பா அதெல்லாம் சொல்லாம இருக்க மாட்டாங்க….

மத்தபடி முக்கியமான ப்ராஜக்டா அகதன் பேங்களூர் போறதுன்னு சொன்னது….இந்த இவள அடச்சு வச்சு கல்யாணம் செய்ற மாதிரி காமிச்சு, கல்ப்ரிட்டை பிடிக்கிற பராஜக்ட்டையாதான் இருக்கும்…..

யோசிச்சுப் பார்த்தா……மித்ரனோட ஒரு வார்த்தை கூட டைரக்டா இவ புரிஞ்சுகிட்ட மீனிங்ல இல்லையே….. மகிபா என் ஃபாஸ்ட் னு சொன்னானே தவிர அவன் என் ஃபர்ஸ்ட் வைஃப்னு சொல்லலை….. அகதன் பேங்களூர் போயிருக்கான்னு தான் சொன்னாங்களே தவிர ஆஃபீஸ் விஷயமான்னு யாருமே சொல்லலையே….. இப்டி ஒவ்வொரு வரியிலும் இவளுக்குத் தேவையான உண்மை இருந்திருக்கத்தான் செய்கிறது….

ஆக அகதன்  ஒளிஞ்சிருக்கது பேங்களூர்…. இப்படி ஒவ்வொரு செயலுக்கும் முதல் நொடி கொதிப்பதும்…அடுத்து அதன் விளக்கம் புரிய கோபம் மட்டுப்படுவதுமாய் இருந்தவளுக்கு விஜிலாவை மித்ரன் மிரட்டியதும் சுர் என் ஏறியது….அது இவளுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை….

ஆனால்  ஏன் மிரட்டினான்னு அப்பவே யோசிக்றப்ப அது வேற மாதிரி புரியுது… விஜிலா இந்த மனோ வெட்ஸ் மித்ரன் ட்ராமால குழப்பத்தை கொண்டு வந்துடக் கூடாதுன்னு மித்ரன் இப்படி மிரட்டி இருக்க மாட்டான்….

மனோவை மிரட்டி கல்யாணம் செய்றான் மித்ரன்னு கல்ப்ரிட்டுக்கு தெரியனும்னுதானே மித்ரன் எதிர்பார்க்கான்….அப்ப விஜிலா வழியா விஷயம் வெளிய போனாலும் மித்ரன் ப்ளானுக்கு என்ன ப்ரச்சனை வர முடியும்?

ஆக இது விஜிலா இவளோட வீட்டை விட்டு வெளிய போய்ட கூடாதுன்றதுக்கான மிரட்டல். குழந்தையோட அவங்க எங்க போய் நிப்பாங்கன்னு நினைக்கான் போல…. அதோட விஜிலா சேஃப்டி பத்தியும் மித்ரன் யோசிச்சுருப்பான்….. ஆனா ஒன்னு நிஜம்….மித்ரன் எத்தனை தான் தன்பக்க நியாயத்தை விளக்கம் சொன்னாலும்….. அதெல்லாத்தையும் அப்படியே நம்புற மன நிலையில நிச்சயமா விஜிலா இல்லை…… வர்ஷன் கூட உள்ள ப்ரச்சனையே அவங்களுக்கு எல்லோர் மீதும் நம்பிக்கை இன்மையை கொண்டு வந்திருக்கும்…. அதில் எப்பவுமே மித்ரனைப் பத்தி தப்பா மட்டுமே கேள்விப் பட்டிருக்கிறப்ப விஜிலா எங்க மித்ரனை நம்ப? ஆக விஜிலாட்ட விளக்கி ஒரு ப்ரயோஜனமும் இல்லைன்ற நிலையில்… மித்ரன் விஜிலாவை மிரட்டினது  தவிர்க்க முடியாத ஒன்னுனு அர்த்தம் ஆகுது….

அபவ் ஆல் மித்ரன் கண்டிப்பா போலீஸ்…. ஏர்போர்ட்ல….அவன் பேசஞ்சர்ஸ் வர்ற வழியா வராம….பைலட் அண்ட் செக்யூரிட்டி ஆஃபீஸர்ஸ்  வர்ற வழியா அவன் ப்ளைட்டுக்கு வந்திருக்கனும்….அது ஒரு போலீஸ் ஆஃபீஸர்க்குதான் பாஸிபிள்…..அகதன் இவ அப்பாலாம் மித்ரன் ப்ளான்க்கு கோ ஆப்ரேட் செய்ய அவன் போலீஸ்ன்றதும் முக்கிய காரணமா இருக்கும்…..இல்லைனா போலீஸ்ட்ட போங்க  இப்டில்லாம் ட்ராமா ஆடாதீங்கன்னுதான் மித்ரனுக்கு பதில் கிடச்சிருக்கும் இவளோட அப்பா அண்ணாட்ட இருந்து….

சோ ஒன் வீக்ல விசா வாங்கிட்டு மேரேஜ் முடிஞ்சு சுவிஸ் போறது எல்லாம் நிஜம்…..ஆனா ஏன் இந்த ட்ராமா? இதை வச்சு எப்டி கல்ப்ரிட்ட பிடிக்க போறாங்க? அதுக்கு எதுக்கு ஸ்விஸ் போகனும்….? அவ்ளவு அவசரம்னா மேரேஜை ஏன் ஒன் வீக் தள்ளி வைக்கனும்….? உடனே ஏன் வைக்கலை…?

அதுவும் என்ட்ட மட்டும் தான் எதையும் சொல்ல மாட்டான்…..மத்தபடி அகிட்ட சொல்லுவான்…அப்பாட்ட சொல்லுவான்……இல்லை இது இப்டி இல்லை….இதவிட மோசம்……விஷயத்தை அகிட்ட சொல்லியிருக்கான்…அப்பாட்ட சொல்லியிருக்கான்….என்ட்ட அம்மாட்ட விஜிலாட்ட மட்டும் தான் சொல்லலை…….ஆக லேடிஸ்னா இவனுக்கு கிள்ளுக் கீரையா தெரியுது என்ன?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.