முகத்தில் எதுவோ யோசனையோடு வந்து சோபாவில் தொப்பென்று அமர்ந்த கன்யாவை புரியாமல் பார்த்த குருமூர்த்தி,
“என்னடா கன்யா?... என்னாச்சு?... என்ன யோசனை?...” என அவர் கேட்கவும்,
“ஒன்னுமில்லை…” என்றாள் அவள்…
“இல்லடா உன் முகமே சரியில்லை… என்ன நடந்துச்சுன்னு அப்பாகிட்ட சொல்லுடா…”
“ஓ… டாடி… உங்க மம்மியைப் பார்த்துட்டு வரேன்…”
“இன்னொரு தடவை அப்படி சொல்லாத…. எனக்கு அருவருப்பா இருக்கு…” என்றார் குருமூர்த்தி முகத்தில் வெறுப்புடன்…
‘ஓகே. ஒகே… டென்ஷன் ஆகாதீங்க… பட் நீங்க என்னதான் இல்லன்னு சொன்னாலும் அதுதானே டாடி உண்மை…”
“ப்ளீஸ்… கன்யா… வேண்டாம்… அந்த பேச்சு… விடு… நீ எங்க போயிட்டு வர்ற?...”
“ஆசிரமத்துக்குப் போய் உங்க மம்மி அதான் என் பாட்டியைப் பார்த்து கொஞ்சம் செண்டிமென்டலா பேச வேண்டி இருந்துச்சு… அதான் பேசிட்டு அவங்க ரியாக்ஷனையும் பார்த்துட்டு அடுத்து என்ன செய்யன்னு யோசிச்சிட்டிருக்கேன்… வேற ஒன்னும் இல்லை…”
“நானே உன்னை கேட்கணும்னு தான் நினைச்சிட்டிருந்தேன்… நீ ஏன் இப்போ தொடர்ந்து அங்க போயிட்டு வர்ற?...”
“பின்ன எப்படி டாடி… உங்க ப்ளான் சக்ஸஸ் ஆகும்?... பாட்டியைப் பார்த்து பேசி அவங்க மனசை கரைச்சா தான் அடுத்த கட்ட நடவடிக்கையில இறங்க முடியும்… அதான்…”
“அவங்க உன்னை நம்ப மாட்டாங்களேடா… அப்புறம் எப்படி?...”
“அதுக்குத்தான்… இரண்டு மூணு நாளா தொடர்ந்து ஆசிரமம் போயிட்டு வந்தேன்.. அவங்க என்னைப் பார்க்க மறுத்தப்பவும்… இன்னைக்கு ஒரு முடிவோட போய் பார்த்து பேசிட்டு என் மேல அவங்களுக்கு இருக்குற பாசத்தை தூண்டிவிட்டுட்டு வந்திருக்கேன்… கண்டிப்பா அது வொர்க் அவுட் ஆகும்…”
“அதுக்குத்தான் அங்க போனீயா?... ஹ்ம்ம்.. சரிடா.. எதுக்கும் அவங்க கிட்ட கொஞ்சம் டிஸ்டன்ஸ் மெயின்பண்ணு… அதுதான் உனக்கும் நல்லது… சரியாடா…” என கனிவாக அவர் கேட்க
“ஹ்ம்ம்…” என்றவள், “எனக்கு தெரிஞ்சு யோசிக்க ஆரம்பிச்சிருப்பாங்க… சோ இன்னும் கொஞ்ச நாளில் நம்ம வீட்டுக்கே வந்திடுவாங்க… எங்கூட முன்ன இருந்த மாதிரி…” என அவள் சிரிப்புடன் சொல்ல
“அவங்க வந்ததும், நம்ம பிளானை முடிச்சிடணும்… சரியாடா?...” என அவளின் அருகே வந்து அவர் அமர்ந்ததும், அவள் பட்டென்று எழுந்து கொண்டாள்…
“என்னாச்சுடா?...”
“நத்திங்க் டாடி… கொஞ்சம் பெர்ஃபார்மன்ஸ் எல்லாம் பண்ணினேன்ல… அதான் டயர்டா இருக்கு… நான் ரூமுக்கு போறேன் டாடி…” என்றவள் அவரின் பதில் வரும் முன்னே அங்கிருந்து சென்றுவிட்டாள்…
தனதறைக்குச் சென்று கதவை மூடியவள், மெத்தையில் அமர்ந்தாள் காவேரியை நினைத்தபடி…
அவளறியாமல் அவள் விழி கலங்க ஆரம்பிக்க, மெல்ல கண் மூடி அதை உள் வாங்கினாள் அவள்…
தொடரும்
{kunena_discuss:907}