"என்னவோ போ... இந்த காலத்து பசங்க ஏன் தான் அப்படி இருக்காங்களோ..."
"அப்புறம் யுக்தா நாளைக்கு சென்னைக்கு வர்றாளாம்... ஆனா அவங்க வீட்ல தான் அவ இருக்கப் போறாளாம்...."
"ஒ..ஹோ... அதுவும் சரி தான் மதி... கொஞ்ச நாள் அவ அங்கேயே இருக்கட்டும்..." என்று மதியும் செந்திலும் பேசிக் கொண்டிருக்கும் போது...
"அண்ணா நான் சொல்லல.. அண்ணி என்னோட எங்கேஜ்மெண்ட்குள்ள வருவாங்கன்னு....
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
புவனேஸ்வரியின் "இத்தனை நாளாய் எங்கிருந்தாய்" - காதல் கலந்த குடும்ப கதை...
படிக்க தவறாதீர்கள்...
அம்மா அண்ணி என்னோட எங்கேஜ்மெண்ட்க்கு வருவாங்கள்ள..." என்று சந்தோஷமாக கேட்டாள் பிரணதி...
"பிரணதி... இவ்வளவு நேரம் நாங்க பேசனதை கேட்ட இல்ல... இவனை பார்க்கவோ இங்க இருக்கவோ பிடிக்காம தான் யுக்தா அவங்க வீட்ல இருக்கப் போறாளாம்... அவ எப்படி நிச்சயத்துக்கு வருவா...
நாம நாளைக்கு யுக்தா வந்ததும் அவளை போய் பார்ப்போம்... உன்னோட நிச்சயதார்த்தத்தை பத்தி பேசுவோம்... ஆனா அவ வரனும்னு யாரும் கூப்பிடவேண்டாம்... அப்புறம் நம்மக்கிட்ட வரமுடியாதுன்னு சொல்ல அவளுக்கு சங்கடமா இருக்கும்... நான் சொல்றது புரியுது இல்ல... அப்புறம் மதி நாளைக்கு நாம 3 பேர் மட்டும் தான் யுக்தாவை பார்க்கப் போறோம்... உன் பையன் அங்க வந்தா யுக்தாவுக்கு எப்படி இருக்குமோ... அதனால அவன் கிட்ட சொல்லு... நாளைக்கு கூட வர வேண்டாம்னு..." என்று சொல்லிவிட்டு செந்தில் அங்கிருந்து சென்றுவிட்டார்...
இதைக் கேட்டு மதி, பிரணதியின் முகம் வாடிவிட்டது என்றால்... பிருத்வியோ முற்றிலும் உடைந்துப் போனான்.
தொடரும்
{kunena_discuss:933}