(Reading time: 33 - 65 minutes)

"ந்ததுதான் வந்த ஒரு 3வருஷத்துக்கு முன்னாடி வந்திருக்கக் கூடாதா..?? உன்னோட காதலை சொல்லியிருக்கக் கூடாதா..?? இப்போ நான் சப்னாவை காதலிக்கிறேன்... கல்யாணம் பண்ணிகிறதா சொல்லியிருக்கேன்... இப்போ நீ வர... ஏன் யுக்தா..??" என்று அவன் கேட்டதும் அவனையே பார்த்திருந்தவளின் கண்கள் கலங்கியிருந்தது... அது சந்தோஷத்தில் வந்த கண்ணீர்...

"அன்னைக்கு நீ அழுதுக்கிட்டே இங்க இருந்து நியூயார்க் போன போது என்னால த..தடுக்க முடியல... எனக்கு அந்த வயசும் இல்ல... ஆனா இப்போ திரும்பவும் நீ நியூயார்க்கே போகப் போற... அதுவும் என்னால போகப் போற... நானே உன்னை வேதனைப்படுத்தி அனுப்பப் போறேன்... அது ரொம்ப கஷ்டமா இருக்கு யுக்தா.. நீ நியூயார்க் போ...போகாத யுக்தா... போகாத ப்ளீஸ்.." என்று அவன் சொன்னதும்... உடனே பரப்பரப்பாக கலங்கியிருந்த கண்களை துடைத்தவள்... அவன் கைகளை பிடித்துக் கொண்டு...

"இ..இல்லை பிருத்வி... நான் ஏன் வேதனைப் படப் போறேன் பிருத்வி... உங்களோட இந்த... இந்தப் பேச்சே போதும்... நீங்க என்னை காதலிக்க வேண்டாம்... என்னை க..கல்யாணம் பண்ணிக்க வேண்டாம்... நீங்க என்னை ஞாபகம் வச்சிருக்கீங்க அதுவே போதும்...

நான் சந்தோஷமா நியூயார்க் போவேன்... நியூயார்க் என்ன..?? இப்போ சாவு வ..வந்தாக் கூட சந்தோஷமா செத்துப் போவேன்... ரொம்ப சந்தோஷமா செத்துப் போவேன்... ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷமா செத்துப் போவேன் பிருத்வி..." என்ற அந்த நொடி அவள் வாயைப் பொத்தியவன்..

திடிரென்று அவளை அணைத்துக் கொண்டு... "நீ நியூயார்க்கே போக வேண்டாம்னு சொல்றேன்... நீ... நீ என்னடான்னா சாவறதப் பத்தி பேசற... உனக்கு ஒன்னும் ஆகாது யுக்தா... ஒன்னும் ஆகாது..." என்றான் அவளை அணைத்தப்படியே...

இதுவரையிலும் சில வருடங்களாக பிருத்வி தன்னை நினைவில் வைத்திருப்பானா..?? என்று மருகிக் கொண்டிருந்தவளுக்கு... சில நாட்களாக தன் காதல் சொல்வதற்கு முன் நிராகரிக்கப்பட்டதே என்று வேதனையில் தவித்துக் கொண்டிருந்தவளுக்கு... யாரிடமும் தன் கஷ்டத்தை சொல்லி ஆறுதல் தேடவோ... வாய்விட்டு அழுது வேதனையை போக்கிக் கொள்ளவோ முடியாமல் இருந்தவளுக்கு... இவனின் தற்போதைய இந்தப் பேச்சும்... இந்த அணைப்பும்... இப்போது தேவையான ஒன்றாய் இருந்தது அவளுக்கு...

அந்த அணைப்பில்.... அவனை விட்டு விலக வேண்டும் என்று அவள் நினைத்தது... பிருத்வியை பார்க்கவே வேண்டாம் என்று தன் சகோதரி கூறியது... அந்த சப்னா... இப்போது இருக்கும் இந்த சூழ்நிலை எல்லாவற்றையும் அவள் மறந்துவிட்டாள்... இப்போது அவள் காதல் மட்டும் தான் அவளுக்கு நினைவில் இருந்தது... மொத்தத்தில் இப்போது அவள் வசம் அவள் இல்லை...

என்னவோ... என்னவோ...

என் வசம் நானில்லை...

என்ன நான் சொல்வதோ...

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

VJ Gன் "அனு என் அனுராதா..." - காதல் கலந்த குடும்ப தொடர்

படிக்க தவறாதீர்கள்...

என்னிடம் வார்த்தையில்லை...

உன் சுவாசத்திலே...

நான் சேர்ந்திருப்பேன்...

உன் ஆயுள் வரை...

நான் வாழ்ந்திருப்பேன்...

உன்னோடு நானாக...

என்னோடு நீயாகவா...

பிரியமானவனே...

பிரியமானவனே...

பிருத்வியுமே அவனை மறந்திருந்தான்... சப்னாவை, தன் கொள்கையை, இந்த சூழ்நிலையை, எல்லாவற்றையும் மறந்திருந்தான்... எங்கேயோ மனதின் ஓரத்தில் ஒளிந்திருந்த யுக்தாவின் மேல் உள்ள அவனின் காதல் தான் இப்போது மேலோங்கி இருந்தது...

இருவருமே அவர்களை மறந்திருந்தனர்... போதை மயக்கத்தோடு சேர்ந்த காதல் மயக்கமும் சேர்ந்து அங்கே ஒரு அழகான காதல் நாடகம் அரங்கேறியது... அதில் காமம் கலந்திருந்தாலும் காதல் தான் மேலோங்கி இருந்தது... இது உணர்ச்சிகள் தூண்டப்பட்டதால் நடந்த தவறு என்பதை விட உணர்ச்சிவசப்பட்டதால் நடந்த தவறு என்று தான் சொல்ல வேண்டும்.

அன்று நடந்ததை கவியிடம் சொன்ன யுக்தா சிறிது நேரம் மௌனமாக ஜன்னலில் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள்... கவிக்கும் அவளின் நிலைமை புரிந்தது... எப்போதோ நடந்திருந்தாலும் அதன் தாக்கம் இன்னும் அவளுக்குள் இருக்கிறது என்பதை கவியால் புரிந்துக் கொள்ள முடிந்தது...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.