(Reading time: 33 - 65 minutes)

னால் சம்யூவிடம் பிருத்வி இப்படியெல்லாம் பேசியது தான் இவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது... இப்போது சண்டைப் போட்ட பிருத்விக்கும் அன்று சம்யூவிடம் பேசிய பிருத்விக்கும் நடுவில் நிறைய வித்தியாசத்தை உணர்ந்தாள் கவி... போதையில்  மனசில் இருக்கும் உண்மயெல்லாம் பேசுவார்களாமே அப்படி தான் பிருத்வியும் பேசினானா..?? பின் ஏன் சம்யூவிடம் அப்படி நடந்துக் கொண்டான்..?? என்று புரியவில்லை இவளுக்கு...

பின் மௌனத்தை கலைத்து யுக்தா பேச ஆரம்பித்தாள்... "போதையில இருக்கும்போது என்கிட்ட ஒருத்தர் தப்பா நடக்க முயற்சி பண்ணியிருந்தா கண்டிப்பா போராடி என் மானத்தை காப்பாத்திக்க முயற்சி பண்ணியிருப்பேன்... இல்லை உயிரை விட்ருப்பேன்... அதை பிருத்வியே செஞ்சிருந்தாலும் அப்படிதான்... ஆனா அப்ப பிருத்வி பேசினதை கேட்டு தான் நான் உணர்ச்சிவசப்பட்டுட்டேன்... ஆனா அதை நான் நியாயப்படுத்தல...

கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு பொண்ணுக்கு இருக்க வேண்டிய முக்கியமான ஒன்னு கற்பு... அதையே நான் இழந்துட்டு நிக்கறதை நினைச்சா எனக்கே என் மேல கோபம்... நான் செஞ்ச தப்பே அந்த பர்த்டே பார்ட்டிக்கு போனது தான்...

மறுநாள் என்னை பிருத்வி எழுப்பினப்ப எனக்கு ஒன்னுமே புரியல... எல்லாம் கனவுல நடந்த மாதிரி இருந்துச்சு... அப்புறம் என்ன நடந்ததுன்னு நான் உணர ஆரம்பிச்சப்ப... அம்மா வந்து முன்னாடி நிக்கிறாங்க... அவங்களை பார்த்ததும் என் உடம்பெல்லாம் கூசி போச்சு... பெத்தவங்களுக்கு ஒரு பொண்ணு தேடிக் கொடுக்க கூடாததை தேடிக் கொடுத்துட்டேனேன்னு கஷ்டமா இருந்துச்சு... அப்படியே செத்துடலாமான்னு இருந்துச்சு... ஆனா சாவு ஒன்னே எல்லாத்துக்கும் தீர்வா ஆகாதே...

அம்மாக்கிட்ட எதையும் மறைக்க தோனல.. எல்லாத்தையும் சொல்லிட்டேன்... அப்புறம் நடந்தது தான் உனக்கே தெரியுமே... ஆனா வீட்டுக்கு வந்து யோசிச்சப்ப தான்.. நான் அம்மாக்கிட்ட எதையும் சொல்லியிருக்கக் கூடாதோன்னு தோனுது... இதுல பிருத்வியும் நானும் மட்டும் சம்பந்தப்படல... அந்த சப்னாவும் எங்களுக்கு நடுவுல இருக்கா...

நான் பிருத்வியை காதலிச்சப்போ... அவர் சப்னாவை லவ் பண்றது தெரிஞ்சு எனக்கு கஷ்டமா இருந்தது போல தானே அவளுக்கும் இருக்கும்... இதுல பிருத்வி வேற எப்படி ஃபீல் பண்ணுவாரோ... பெரியவங்க என்னை முடிவெடுப்பாங்களோ... இதெல்லாம் யோசிச்சப்போ.. பிருத்வி கூட நான் கலந்து பேசியிருக்கனுமோ... அதுக்குள்ள எங்களுக்குள்ள நடந்ததை அம்மாக்கிட்ட சொல்லிட்டேனோ... இப்படியெல்லாம் தான் நான் யோசிச்சிட்டு இருந்தேன்...

ஆனா அன்னைக்கு பிருத்வி பேசனப்போ தான்... அன்னைக்கு நடந்தது எதுவும் பிருத்விக்கு ஞாபகம் இல்லைன்னு தெரிஞ்சுது... ஆனா பிருத்வி நான் தான் போதை மருந்து கலந்துக் கொடுத்துட்டேன்னு குற்றம் சாட்டினப்போ தான் எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு கவி.."

"ஆனா சம்யூ... அந்த போதை மருந்தை யாரு கலந்திருப்பாங்க... நீ கேக்ல கலக்கல... பிருத்வியும் செஞ்சிருக்க வாய்ப்பில்லன்னு தான் தோனுது... அப்ப அந்த வேலையை யார் செஞ்சிருப்பாங்க சம்யூ.."

"தெரியல கவி... அதை யார் செஞ்சிருப்பாங்கன்னு தெரியல... நாங்க ரெண்டுப்பேரும் சாதாரணமான ஆளுங்க.. எங்களுக்கு இப்படியெல்லாம் யார் செஞ்சிருக்கப் போறாங்க..."

"ஏன் சம்யூ... அந்த சப்னா ஏதாவது செஞ்சிருப்பாளோ..??"

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தமிழ் தென்றலின் "என் சிப்பிக்குள் நீ முத்து..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

"சப்னாக்கு இப்படியெல்லாம் செய்யனும்னு என்ன இருக்கு கவி... அவ பிருத்வியை கல்யாணம் செஞ்சுக்க ஆசைப்பட்றா... இப்பவும் அவளுக்கு அந்த ஆசை இருக்கே.. அப்புறம் எப்படி அவ இப்படி செஞ்சிருப்பா... அப்புறம் நான் அந்த பர்த்டே பார்ட்டிக்கு வர்றது வேற அவளுக்கு தெரியாதே... அம்மா நான் வரப்போறதில்லன்னு தானே சொல்லியிருக்காங்க.. அதனால அவளா இருக்காது..." என்றதும் கவியும் அதை ஆமோதிப்பதாக தலையாட்டினாள்...

"இதுல யாரும் சம்பந்தப்பட்டிருக்க வாய்ப்பில்லைன்னு தான் நினைக்கிறேன்... ஏதாவது தவறு நடந்திருக்கனும்... ஒன்னு நான் கேக் செய்ய வாங்கி வந்த பொருட்களிலோ... இல்லை பிருத்வி வீட்ல சாப்பிட்ட கூல்ட்ரிங்க்ஸ்லயோ ஏதாவது தவறுதலா மிக்ஸ் ஆயிருக்கலாம்...

ஆனா பிருத்வி நான் தான் இதை செய்தேன்னு சொன்னப்போ... என்மேலேயே எனக்கு கோபம் வந்துச்சு... நான் ஒழுங்கா இருந்திருந்தா இந்த குற்றத்தை ஏத்துக்க வேண்டியதில்லையே... எனக்கு எதையும் நிரூபிக்கனும்னு தோனல...

நான் பிருத்வியை காதலிக்கிறேன்... கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டேன்... அவர் மட்டும் தான் என் வாழ்க்கையில இணையா வரனும் நினைச்சேன்... ஆனா அதுக்காக பிருத்வியை எப்படியும் அடைஞ்சிடலாம்னு நான் நினைச்சதில்ல... இப்ப வரைக்கும் அவரும் என்னை காதலிக்கனும்னு மட்டும் தான் நான் எதிர்பார்க்கிறேன்...

அதனால அன்னைக்கு என்னோட கற்பை காரணமா வச்சு நான் அவரை கல்யாணம் செஞ்சுக்க விரும்பல... பிருத்வி சப்னா காதலில் நான் குறுக்க வர விரும்பல... அதான் பிருத்விக்கிட்ட அன்னைக்கு அப்படி பேசினேன்... அதெல்லாம் நானே செஞ்சதா ஒத்துக்கிட்டேன்.. பிருத்வியையோ அவங்க குடும்பத்தையோ மரியாதை இல்லாம பேசினா... இந்த கல்யாண ஐடியாவை விட்றுவாங்கன்னு நினைச்சேன்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.