“ இவனுக்கு கொஞ்சம் ஓவரா வேப்பிலை அடிச்சிட்டோம்போல.. அப்படியே காதல் மன்னனாய் மாறிட்டானே” என்று அவள் ஆர்பரிக்கும்போதே அவளுக்கு ஒரு மெசெஜ் வந்தது.
துடிக்கும் இதயத்திற்கு
இன்னல்மேல் இன்னல்
குழப்பம்மேல் குழப்பம்..
என்னவளே,
இந்நொடியில் மிக அழகு யார் ?
உன் கண்களை கவரும் நிலவா?
உன்னை தொட்டுத் தழுவும் காற்றா?
உன் பாதத்தில் ஒட்டி கொண்ட மணல்துகளா?
உன் இதயம் மீட்டிடும் கடல் அலையா?
இயற்கையில் தன்னை தொலைக்கும் தலைவியே,
உனக்குள் தொலைந்த என்னை எப்போது மீட்டெடுப்பாய்
-இந்திரன்
“ ராஸ்கல்.. ரெண்டு வருஷமாய் தொல்லை பண்ணுறியே யாருடா நீ ? தேட மாட்டேன்..நீ யாருன்னு நான் தேடவே மாட்டேன்..என் மௌனம் தாங்க முடியாமல்..நீயே என் முன்னாடி வரனும்..அன்னைக்கு சொல்லுறேன் என் பதிலை”என்று மனதிற்குள் சூளுரைத்தவள் வழக்கம் போல அந்த மெசேஜை டிலீட் செய்து விட்டு வெற்றிக்காக காத்திருந்தாள்.
அதே இரவு, தன் வீட்டு தோட்டத்தில் நிலவை வெறித்தபடி அமர்ந்திருந்தாள் அர்ப்பணா. மூன்று வருடங்களுக்குமுன் இருந்த அவளின் வீட்டை விட ஐந்து மடங்கு பெரிய வீடு அது. மிக அழகாய் பராமரிக்கப்பட்ட தோட்டம்.
நிலவையே இமைக்காமல் பார்த்தாள் அர்ப்பணா. சொல்ல முடியாத அழுத்தம் அவள் நெஞ்சுகூட்டை துளைப்பது போல இருந்தது. ஒவ்வொருவருக்கும் நிலவென்றால் ஒவ்வொரு உணர்வு..
காதல்,வெறுமை,அழகு,குளுமை…! அர்ப்பணாவிற்கு நிலவென்பது அவள் வணங்கும் வேல் முருகன்.
“ இன்னும் எதையெல்லாம் நான் பார்க்கனும்ன்னு நினைச்சு என்னை உயிரோடு வெச்சுருக்க முருகா?” என்று மனமுருகி கண்கலங்கிட அவள் கேட்க அடுத்த நொடியே இரு வலிய கரங்கள் அவளின் விழிகளை மூடின.
அது யாருன்னு அடுத்த அத்தியாயத்தின் சொல்றேன்.
-வீணை இசைந்திடும்-
{kunena_discuss:1055}