“அய்யோ சரூ! நான் அப்படி சொல்லலை, அப்படி நினைக்கவுமில்லை. எனக்கு தான் அது அன்சேஃப்ன்னு தோனிச்சு” சரயூ தன்னை தவறாக புரிந்துகொண்டாளே என்று அவசரமாக தன்னிலை விளக்கமளித்தான்.
“நீ தானே சொன்ன எதுவானாலும் தயங்காம உங்கிட்ட நான் சொல்லலாம்னு… அதான் மனசிலிருந்ததை சொல்லிட்ட… நீ ரொம்பவே தைரியமான பொண்ணுன்னு நேத்திக்கு பஸ்ஸிலப் பார்த்தேனே. ஆட்டோல போறதுதான் அன்சேஃப்னு தோனிச்சு. சோ உன்னை ஃபாலோ பண்ணலாம்னு நினைச்சேன்”
தன் அப்பாவை சஞ்சய் குறை சொல்லலை; அவன் மனசுல ஆட்டோலப் போறதை பற்றித் தோனிதை தான் சொல்லியிருக்கான் எனப்புரியவும்,
“ஆட்டோலப் போறது உனக்கு அன்சேஃப்னு தோனினதை வெளிப்படையா அப்போவே சொல்லியிருந்தா இவ்வளவு டைம் வேஸ்ட் பண்ணியிருக்க வேணாமே. வா! வந்து வண்டியெடு… என்னை வீட்ல டிராப் பண்ணு” என்றவளின் குரலில் கோபம் இருந்த இடம் தெரியாமல் போயிருக்கக் காரை நோக்கி நடந்தாள்.
சரயூவின் இந்த அதிரடி மாற்றமும் அவள் தன்னுடன் வரப் போகிறாளென்ற சந்தோஷமும் அவனை மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடிக்க செயலற்றுப் போனான்.
அவன் அங்கேயே நிற்பதைப் பார்த்தவள், “இப்போ என்ன பிரச்சனை? உங்கூட கார்ல போறதும் அன்சேஃபா?” என்று தீவிரமாக கேட்கவும்
“இல்லை சரூ! அது…” என்று சஞ்சய் ஏதோ சொல்லுமுன்னே அவள் சிரிக்கவும் அவனும் சிரித்தான்.
முத்து ஒளிரும்…
{kunena_discuss:1038}