அதே நேரம், திலீப்பின் வீட்டில்,
“அப்பா… நாளைக்கு எங்க ஸ்கூல்ல ஃபங்க்ஷன் இருக்கு… நீங்களும் அம்மாவும் கண்டிப்பா வரணும்….”
திலீப்பின் மடியில் சலுகையாய் அமர்ந்து கொண்டபடி பூஜா கூற,
“அம்மா வருவாங்க உங்கூட… சரியா?...” என்றான் திலீப், சரயூவைப் பார்த்தபடி…
“ஏன்ப்பா?... அம்மாகூட நீங்களும் வந்தா என்ன?...”
“இல்லம்மா… அப்பாக்கு கொஞ்சம் வேலை இருக்கு… அதான்…”
“போங்கப்பா… எப்ப பார்த்தாலும் இப்படியே சொல்லுங்க…”
பூஜா தகப்பனின் மடியில் இருந்து இறங்கி வந்து தாயிடம் வந்தாள்…
சரயூவின் முந்தானையை பிடித்து இழுத்தவள்,
“அம்மா… அப்பாக்கும் உனக்கும் சண்டையா?...” எனக்கேட்டாள் மெதுவாக….
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
மதுவின் "மார்பில் ஊறும் உயிரே..." - காதல் கலந்த குடும்ப தொடர்...
படிக்க தவறாதீர்கள்...
அதிர்ந்து இருவரும் ஒருசேர முகம் பார்த்துக்கொள்ள, முதலில் சுதாரித்தது சரயூ தான்…
“யாரு சொன்னா அப்படி?... என் பூஜாகிட்ட?...”
அவள் தன் மகளின் முகம் பற்றி செல்லமாக கேட்க,
“நீயும் அப்பாவும் பேசிக்கவே மாட்டிக்குறீங்களே… அதான் கேட்டேன்….” என்றாள் பூஜா, தாயினைப் பார்த்தபடி…
“அப்படி எல்லாம் எதுவும் இல்லடா குட்டி… நாளைக்கு நானும் அப்பாவும் கண்டிப்பா ஸ்கூல் ஃபங்க்ஷன்க்கு வருவோம்… சரியா?...”
“ஹே… ஜாலி… நல்ல அம்மா…” என அவளின் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு விளையாட ஓடிச்சென்ற மகளையே பார்த்துக்கொண்டிருந்தான் திலீப்…
அவனின் மீதே தன் பார்வையை பதித்திருந்தாள் சரயூவும்…
எதேச்சையாக திரும்பியவன் சரயூவின் பார்வையை சந்திக்க நேரிட, சில நொடிகள் அப்படியே நின்றான்…
பின், “சாரி….” என்றான் மெல்ல…
“எதுக்கு?...”
கேள்வி கேட்டவளிடம், “நாளைக்கு எனக்கு வேலை எல்லாம் எதுவும் இல்லை… எங்கூட வர்றது உனக்கு பிடிக்குமோ பிடிக்காதோன்னு தான் பூஜாகிட்ட பொய் சொன்னேன்…” என்றான் அவனும்…
“நீங்க என் புருஷன் தான?...”
பட்டென்று அவள் கேட்க, அவன் சட்டென அவளை நிமிர்ந்து பார்த்தான்….
“சொல்லுங்க?... நான் உங்களுக்கு மனைவி தான?...”
“நீ மட்டும் தான் என் பொண்டாட்டி….”
சற்றும் தாமதிக்காமல் வந்தது அவன் பதில்…
புன்னகை சற்றே இதழில் உதிக்க, அதை ஓரங்கட்டிவிட்டு, அவனிடம் தொடர்ந்தாள் அவள்…
“அப்போ எங்கூட வர்றதுக்கு என்ன தயக்கம் உங்களுக்கு?...”
“தயக்கம் இல்ல… உன் விருப்பம் என்னன்னு தெரியாம நான் சரி சொல்லக்கூடாதுன்னு நினைச்சேன்… அதனால தான் வேலை இருக்குன்னு சொன்னேன்…”
அவன் சொன்னதும், அவனையே சில நிமிடங்கள் பார்த்தாள் சரயூ…
அந்த பார்வையில் கோபம் இல்லை… பரிதாபம் இல்லை… உணர்ச்சியற்ற ஓர் பார்வையாக மட்டுமே அவனுக்கு தெரிந்தது…
“என் தப்பை நான் உணர்ந்துட்டேன் சரயூ… ஒரு பையன் வேணும்ங்கிறதுக்காக உன்னை எவ்வளவு கொடுமைப்படுத்தியிருக்கேன்னு நான் உணர்ந்துட்டேன்… இரண்டு குழந்தையும் சிசேரியன் தான்… இதுல மூணாவதும் ஒரு குழந்தை வேணும்னு நான் நினைச்சது எனக்கே வேதனையா தான் இருக்கு… அதுவும் பையன் தான் வேணும்னு நான் பிடிவாதம் பிடிச்சதை நினைச்சா எனக்கே அசிங்கமா இருக்கு சரயூ… உன் உடல்நிலையைப் பத்தி நான் யோசிக்காமலே போயிட்டேன்… நீயும் அத மனசுல வச்சு தான் குழந்தை பெத்துக்கொடுக்கமாட்டேன்னு சொல்லியிருப்பியோன்னு நிதானமா யோசிச்சுப் பார்க்கும்போது தான் புரியுது…”
அவன் சொல்லி முடித்ததும், விரக்தியாக சிரித்தாள் சரயூ…
அவளிடமிருந்து எதாவது பதில் வரும் என்று எதிர்பார்த்தவனுக்கு அவளது விரக்தியான புன்னகை ஏமாற்றமளிக்க, அவளையேப் பாத்தான் அவன்….
அவன் பார்ப்பதை உணர்ந்தவள், மெல்ல அங்கிருந்து நகர முற்பட, அவன் தடுத்தான்…
“வேலை இருக்கு… நான் போகணும்…”
அவள் விலகுவதிலேயே குறியாய் இருக்க,
“ஒரு நிமிஷம் சரயூ… கொஞ்சம் உங்கிட்ட பேசணும்…” என்றான் அவன்…